search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the teenager was injured"

    • கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
    • வினோதினி சகோதரர்கள் பார்த்திபனை ஓட ஓட விரட்டி பீர் பாட்டிலால் தலையில் தாக்கினர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்து பெருமுனை கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் பார்த்திபன் (வயது 28). இவருக்கும் கோழியூர் கிராமத்தை சேர்ந்த வினோதினி (23) என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு தற்போது பார்த்திபன் மற்றும் இவரது மனைவி வினோதினி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். 

    இந்நிலையில் நேற்று வினோதினியின் கணவர் வீட்டில் இருக்கும் வினோதினிக்கு சொந்தமான திருமண சீர்வரிசை பொருட்களை எடுப்பதற்கு வினோதினியின் சகோதரர்கள் விக்னேஷ், விஜய் மற்றும் இவர்களுடைய நண்பர்களுடன் பெருமுளையில் உள்ள பார்த்திபன் வீட்டிற்கு சென்றனர். அப்போது பார்த்திபனுக்கும், வினோதினியின் சகோதரர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் இந்த வாய்த்தகராறு கைகலப்பாக மாறியது. இதனால் வினோதினி சகோதரர்கள் பார்த்திபனை ஓட ஓட விரட்டி பீர் பாட்டிலால் தலையில் தாக்கினர். 

    இதனை தடுக்க வந்த பார்த்திபனின் மைத்துனர் வடிவேலையும் அவர்கள் கல் மற்றும் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பார்த்திபனை அருகில் இருந்தவர்கள் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பார்த்திபனை சேர்த்தனர். இது குறித்து புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×