என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The store is closed to the public"

    • ஒரு பேக்கரியில் வாடிக்கையாளர்கள் ஒரு கிலோ ஜிலேபி உள்ளிட்ட இனிப்பு பொருள்கள் வாங்கி வீட்டில் சென்று பார்த்த போது கெட்டு ப்போன உணவாக இருந்தது.
    • அந்த பேக்கரிக்கு சென்று பேக்கரி கடை கதவு ஷட்டரை மூடி விற்பனையாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

    செம்பட்டி:

    செம்பட்டியில், ஓட்ட ல்கள், பேக்கரிகள், டீக்கடை கள், மளிகை கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் செய ல்பட்டு வருகிறது. இந்நிலை யில், இங்கு உள்ள உணவக ங்கள் மற்றும் பேக்கரிகளில், கெட்டுப்போன உணவு பொருட்களும், டிபார்ட்மெ ண்ட் ஸ்டோர், மளிகை கடைகளில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்து வருவ தாக, தொடர்ந்து புகார் எழுந்துள்ளது.

    இந்நிலையில் செம்பட்டி பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு பேக்கரியில் வாடிக்கை யாளர்கள் ஒரு கிலோ ஜிலேபி உள்ளிட்ட இனிப்பு பொருள்கள் வாங்கிச் சென்றனர். வீட்டில் சென்று பார்த்த போது கெட்டு ப்போன உணவாக இருந்தது.

    இதனால் அதிர்ச்சிய டைந்த வாடிக்கை யாளர் மற்றும் அவரது ஆதரவாள ர்கள் அந்த பேக்கரிக்கு சென்று பேக்கரி கடை கதவு ஷட்டரை மூடி விற்பனையாளரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர்.

    இச்சம்பவத்தால் அந்த கடை முன்பு மக்கள் கூடினர். இச்சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட நிலக்கோட்டை உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் கண்டு கொள்ள வில்லை என கூறப்படுகிறது. எனவே மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் செம்பட்டியில் உள்ள உணவகங்கள் மற்றும் பேக்கரி, மளிகை கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×