என் மலர்
நீங்கள் தேடியது "The sister who killed her brother"
- அடிக்கடி கொலை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு வந்தது
- போலீசார் கைது செய்தனர்
அரக்கோணம்:
அரக்கோணம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (வயது64). இவரது தங்கை மஞ்சுளா(53). தம்பி ஆண்டியப்பன் ஆகியோர் குடும்பத்துடன் ஒரே பகுதியில் வசித்து வருகின்றனர்.
கணவர் கொலை
இந்த நிலையில் கடந்து சில மாதங்களுக்கு முன்பு மஞ்சுளா குடும்பத்தினருக்கும், ஆண்டியப்பன் குடும்பத்தினருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆண்டியப்பனின் மகன் அஜித் மஞ்சுளாவின் கணவர் ஜோதியை கொலை செய்து உள்ளார். இதனால் அஜித் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார் .
தனது கணவர் கொலைக்கு செய்ததற்கு அண்ணன் பெரியசாமி தான் காரணம் என மஞ்சுளா கருதினார்.
இதனால் பெரியசாமிக்கும், மஞ்சுளாவுக்கும் அடிக்கடி கொலை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
அண்ணனை வெட்டினார்
இந்த நிலையில் மஞ்சுளா நேற்று அண்ணன் பெரியசாமி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அண்ணன் தங்கை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மஞ்சுளா தனது அண்ணன் என்றும் பாராமல் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக வெட்டினார்.
இதில் பெரியசாமி ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்து மயங்கி கீழே விழுந்தார்.
இதனைக் கண்ட உறவினர்கள் அவரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் பதிவு செய்து போலீசார் மஞ்சுளாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






