search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the shouting confusion"

    • நகர தலைவர் திருமுருகன் தலைமையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பெண் நிர்வாகி ஒருவர் கூறினர்.

    கடலூர்:

    வடலூரில் பா.ஜ.க. நகர ஆலோசனைக் கூட்டம் நகர தலைவர் திருமுருகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் அக்கினி கிருஷ்ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி, வந்தே பாரத் ரெயில் திட்டம், பெண்கள் இட ஒதுக்கீடு வரவேற்பு, புதிய நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு கருத்து கள் ஆலோசிக்கப்பட்டது. இதில் வந்தே பாரத் ெரயில், மகளிர் இடஒதுக்கீடு குறித்த பிரசாரம் வடலூரில் நடைபெறவில்லை எனவும், பா.ஜ.க. பெண் நிர்வாகி களுக்கு சிலர் போன் செய்து மிரட்டுவதாகவும் கூட்டத்தில் பெண் நிர்வாகி ஒருவர் கூறினர்.

    இதனை தொடர்ந்து இதே கருத்தினை வலி யுறுத்தி பலரும் ஒரே சம யத்தில் பேசினர். இதனால் கூட்டத்தில் கூச்சல் குழப் பம் ஏற்பட்டது. அப்போது, ஒருசிலர் எழுந்து நாற்காலி களை தூக்கிவீசினர். இத னால் கை கலப்பு ஏற்படும் சூழல் உருவானது. அப்போது, பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகிகள், தலை யிட்டு அனைவரையும் சமா தானம் செய்தனர். இதை யடுத்து ஆலோசனைக் கூட்டம் முடிந்து அனை வரும் கலைந்து சென்றனர்.

    ×