search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "the owner was arrested"

    • சம்மந்தம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் பனைமரங்கள் ஏராளமாக உள்ளன.
    • விஷ கள் குடித்த 2 பேரும் மயக்க நிலை அடைந்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே காட்டாண்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் சம்மந்தம் (வயது 36 ). இவருக்கு சொந்தமான நிலத்தில் பனைமரங்கள் ஏராளமாக உள்ளன. இதில் ஒரு மரம் மட்டும் தப்புக் கொட்டையாகவே இருந்து வந்தது. இதனை கண்ட அந்த ஊரைச் சேர்ந்த ஒரு சிலர் அந்த பனைமரத்தில் மட்டும் கள் இறக்கி குடித்து வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த சந்தானம், மரத்தில் ஏறி கள் எடுக்க பயன்படுத்தப்படும் கண்ணாடி பாட்டிலில் ஊமத்தங்காய் பேஸ்டினை கலந்துவிடுகிறார்.

    அதே ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (33), ராஜீ (30) ஆகியோர் வாந்தி எடுத்தபடி நேற்று அதிகாலை 3 மணியள வில் சந்தானத்தின் வீட்டிற்கு வந்து கதவைத் தட்டுகின்றனர். வெளியில் வந்த சந்தானம் உடனடியாக 2 பேரையும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக அனுமதிக்கிறார். விஷ கள் குடித்த 2 பேரும் மயக்க நிலைக்கு வருவதை கண்ட மருத்துவர்கள், அவர்களை மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக பாலசுப்பிரமணியன் அளித்த புகார் மற்றும் வாக்குமூலத்தின் அடிப்படையில் பனை மர உரிமையாளர் சம்பந்தத்தை போலீசார் கைது செய்தனர். அரசால் தடைசெய்யப்பட்ட கள் இறக்கியது, அதில் ஊமத்தங்காய் கலந்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பண்ருட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சபியுல்லா பனைமரங்கள் உள்ள பகுதியை ஆய்வு செய்தார். மேலும், இது போன்று எங்கெல்லாம் பனைமரங்கள் உள்ளன. அங்கு அரசால் தடை செய்யப்பட்ட கள் இறக்க ப்படுகிறதா என்பதனை ஆய்வு செய்து, அதனை அழிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.

    ×