என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The outer district came from outside states and came to Krivalam"

    • பஸ் நிலையம் முழுவதும் ஆந்திர மாநில பஸ்கள்
    • போலீசார் செய்வது அறியாமல் திகைத்தனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதம் நடைபெறும் பவுர்ணமி தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வெளி மாவட்டம் வெளி மாநிலங்களில் இருந்து வந்து கிரிவலம் செல்கின்றனர்.

    இதில் சமீப காலமாக ஆந்திர மாநிலத்தில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கார் மற்றும் ஆந்திர மாநில பஸ்களில் திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டி ருக்கிறார்கள்.

    இந்த நிலையில் இன்று ஆடி மாத பவுர்ணமி முன்னிட்டு இரவு ஆந்திர மாநிலத்தில் இருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட அந்த மாநில அரசு பஸ்களில் இருந்து பக்தர்கள் குவிந்ததனர்.

    பவுர்ணமிக்கு முந்திய நாளே வந்த ஈசானிய லிங்கம் அருகில் உள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் ஆந்திரா மாநில பஸ்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. தற்காலிக பஸ் நிலையம் முழுவதும் ஆந்திர மாநில பஸ்கள் இருப்பதை பார்த்த போலீசார் செய்வது அறியாமல் திகைத்தனர்.

    இதன் பிறகு உடனடியாக அந்த பஸ்களை வெளியேறுமாறு டிரைவர்களை வலியுறுத்தி பஸ்களை வெளியேற்றினர்.

    ×