search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The lorry caught fire"

    • நிலக்கரி ஏற்றிக்கொண்டு செஞ்சிஅருகே செம்மேடு பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு வந்தது.
    • நிலக்கரி யினுள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்த னர்.

    விழுப்புரம்:

    சென்னை எண்ணூர் துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டு செஞ்சிஅருகே செம்மேடு பகுதியில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு வந்தது. இந்த லாரியை செஞ்சி தின்டிவனம் சாலை பெட்ரோல் பங்க் அருகே லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் குளிக்க சென்றார். அப்போது திரும்பி வந்து பார்த்தபோது லாரியில் புகை வருவது தெரியவந்தது. உடனடியாக செஞ்சி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு படையினர் விரைந்து சென்று நிலக்கரி யினுள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்த னர். உடனடியாக சமயோசித மாக செயல்பட்ட தால் தீ அணைக்கப்பட்டு லாரி எரி யாமல் தவிர்க்கப்பட்டது. இதனால் ரூ 50 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதமின்றி மீட்கப்பட்டது. இச்சம்பவம் இப்பகுதி யில் பரபரப்பு ஏற்படுத்தி யது. 

    ×