என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "THE ILLEGALLY OPERATING CUSTOMS SHOULD BE CLOSED"

    • அரியலூர் அருகே மணகெதியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சுங்கச்சாவடியை உடனடியாக மூட வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • 60 கிலோ மீட்டருக்குள் சுங்கச்சாவடி அமைத்தால் உடனடியாக அகற்றி விட வேண்டும் என மத்திய அரசின் ஆணையில் உள்ளது.

    அரியலூர் :

    அரியலூர் அருகே மணகெதியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் சுங்கச்சாவடியை உடனடியாக மூட வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    அரியலூர் அருகே திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பல ஆண்டுகளாக காட்டாற்று நீர் மணகெதி கிராமத்தில் உள்ள சின்ன ஏரியை சென்றடையும். பின்னர் பெரிய ஏரிக்கும் செல்லும், இதனால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் நீர்நிலைகளை நீர்வழி பாதையை ஆக்கிரமித்து மண் அடித்து, தூற்றி விட்டதாக கூறப்படுகிறது. அங்கு சட்டவிரோதமாக சுங்க சாவடி அமைக்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.

    60 கிலோ மீட்டர் இடைவெளியில் சுங்க சாவடியை அமைக்க வேண்டும், 60 கிலோ மீட்டருக்குள் சுங்கச்சாவடி அமைத்தால் உடனடியாக அகற்றி விட வேண்டும் என மத்திய அரசின் ஆணையில் உள்ளது.

    டால்மியாபுரத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மணகெதியில் சுங்கச் சாவடி அமைத்து சட்டவிரோதமாக செயல்பட்டு வருகிறார்கள். 100 சதவீத சாலை பணிகள் முடிந்தவுடன் தான் சுங்கச்சாவடி செயல்படவேண்டும் சாலை பணிகள் முடியாத நிலையில் அடிப்படை வசதிகள் குடிநீர் வசதி, கழிவறை வசதி, முதலுதவி சிகிச்சை வசதி என எதுவும் இல்லை.

    இந்த சூழ்நிலையில் சட்டவிரோதமாக சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பது சட்டவிரோத செயலாகும். சட்ட விரோதமாக கட்டணம் வசூலித்து வரும் மணகெதி சுங்கச்சாவடியை உடனடியாக மூட வேண்டும்

    என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் தா.பழூர் ஒன்றிய செயலாளர் புகழேந்தி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

    ×