search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The girl who went to the shop"

    • சிறுமி கடந்த 12 -ந்தேதி தனது வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக கூறி சென்றார்.
    • சிறுமியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை‌.

    கடலூர்:

    கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த 12 -ந்தேதி தனது வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் சிறுமி மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. அதிர்ச்சிடைந்த பெற்றோர்கள் சிறுமியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை‌. மேலும் அக்கம் பக்கத்தினர் விசாரித்த போது வாலிபர் ஒருவர் சிறுமியை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கலைவாணன் என்ற வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து தொலைபேசி மூலம் தேடி வருகின்றனர்.

    ×