என் மலர்
நீங்கள் தேடியது "The employee tried to steal"
- வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவுக்கு அருகே உள்ள காத்திருப்பு அறையில் நேற்று முன்தினம் 70 வயது மதிக்க தக்க மூதாட்டி ஒருவர், உடல்நலம் பாதித்த நிலையில் தங்கி இருந்தார்.
அதைப்பார்த்த மருத்துவ ஊழி யர்கள் மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்க வார்டுக்கு அழைத்துச் செல்லுமாறு அங்குள்ள ஒப்பந்த பணியாளரிடம் தெரிவித்த னர். இதையடுத்து, தூய்மை பணியை மேற்கொள்ளும் ஒப்பந்த பணியாளர் மூஞ்சூர்பட்டை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 25) மூதாட்டியை ஸ்டிரெச்சரில் படுக்க வைத்து வார்டுக்கு கொண்டு செல்லாமல், ஆரணி ரோட்டுக்கு ஸ்டிரெச்சரை தள்ளிச்சென்றார்.
அங்கு மூதாட்டி காதில் இருந்த கம்மலை கழற்றினார். இதைப் பார்த்த மருத்துமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவருடன் வாக்குவாதம் செய்தனர்.
இதனால் அங்கு கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக வார்டில் சேர்த்தனர்.
ஆனால், அங்கு அவர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இறந்து போனவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் லட்சுமி வேலூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மோகன்ராஜ் மீது கம்மலை திருட முயன்றதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






