என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The bus is overcrowded"

    • கூட்ட நெரிசலால் படியில் நின்றதால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த ஆனைமல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள், கூலி தொழி லாளி.

    இவரது மகள் சாந்தகுமாரி (வயது 16), திமிரியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    நேற்று காலை பள்ளிக்குச் செல்வதற்காக ஆனைமல்லூரில் இருந்து அரசு பஸ்சில் வந்துள்ளார். பஸ்சில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் படியிலேயே நின்று கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

    காவனூரில் இருந்து திமிரி செல்லும் ரோட்டில் தனியார் பள்ளி அருகே செல்லும்போது சாந்தகுமாரி பஸ்சில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    இதில் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை உடனடியாக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

    இது குறித்து திமிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×