என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The application should be registered before the 20th of the school hostels."

    • காலியிடம் இருக்கும் பட்சத்தில் தனியார் கல்லூரி மாணவர்கள் தேர்வு
    • கலெக்டர் தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் செயல்படும் விடுதிகளில் சேர மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    விண்ணப்பம்

    இது குறித்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: 2022-23-ம் கல்வி ஆண்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 16 விடுதிகளில் காலியாக உள்ள 417 இடங்களுக்கு மாணவ மாணவிகள் சேர்க்கைக்காக விண்ணப்பங்கள் இணைய வழியில் வரவேற்கப்படுகின்றன.

    விருப்பமுள்ள மாணவ மாணவிகள் சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர்களை அணுகி குறிப்பிட்ட காலக்கெடுவிற்க்குள் https://tnadw.hms.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    பள்ளி விடுதிகளுக்கு வருகிற 20ம் தேதிக்குள் விண்ணப்ப பதிவு செய்ய வேண்டும். தேர்வு குழுவால் விடுதியில் தங்கும் மாணவர்கள் 21, 22ம் தேதிகளில் தேர்வு செய்யப்படுவார்கள். கல்லூரி விடுதிகளுக்கு வருகிற 5.8.22-ம் தேதிக்குள் விண்ணப்ப பதிவு செய்ய வேண்டும். தேர்வு குழுவால் விடுதியில் தங்கும் மாணவர்கள் வருகிற 10ம் தேதி தேர்வு செய்யப்படுவார்கள்.

    நான்காம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிருஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்கள் 85 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினைச் சார்ந்த மாணவர்கள் 10 சதவீதம் பிற வகுப்பினர்கள் 5 சதவீதம் சேர்க்கப்படுவார்கள்.

    5 கிலோ மீட்டர் இருக்க வேண்டும்

    பள்ளிக்கும் வீட்டிற்கும்மான தொலைவு 5 கிலோ மீட்டருக்கும் மேல் இருக்க வேண்டும். பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவர் கல்வி பயிலும் பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரின் சான்று இணைய வழியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இல்லாத நிலையில் அவ்விடுதியில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையில் காலியிடம் இருக்கும் பட்சத்தில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ×