search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thanjavur farmers"

    நாட்டிலேயே முதன் முறையாக பன்னாட்டு நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டம் (சிஎஸ்ஆர்) நிதியின் மூலம் கும்பகோணம் பகுதியில் உள்ள வாய்க்கால்கள் தூர் வார முடிவு செய்யப்பட்டுள்ளது.
    கும்பகோணம்:

    கும்பகோணம் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுப்பணித்துறை, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் விவசாயிகள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு தலைமை வகித்து உதவி கலெக்டர் எம்.பிரதீப்குமார் கூறியதாவது:-

    ஓ.என்.ஜி.சி நிறுவனம் தனது சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் முதல் தவணையாக ரூ. 1 கோடி நிதியை வழங்கியுள்ளது. இந்த நிதியின் மூலம் கும்பகோணம் கோட்டத்தில் பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய தாலுகாவில் உள்ள 39 அ பிரிவு வாய்க்கால்கள் 213 கி.மீட்டர் தூரத்துக்கு தூர்வாரப்பட உள்ளது.

    சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் நாட்டிலேயே முதன்முறையாக வாய்க்கால்கள் தூர்வாரப்படுவது இதுவே முதல் முறை. இதில் விவசாயிகள் எந்தந்த வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என ஏற்கனவே விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் வரைவு திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

    அதன்படி அடுத்த வாரத்தில் இந்த தூர்வாரும் பணி தொடங்கவுள்ளது. தூர்வாருவதற்கு தேவையான எந்திரங்கள் மாநகராட்சி, நகராட்சி மற்றும் வேளாண்மை பொறியியல் துறையில் உள்ள எந்திரங்களை பயன்படுத்தப்படும். அங்கு இல்லாத பட்சத்தில் தனியார் வாகனங்களை வாடகை அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளப்படும்.

    இந்த பணிகள் அடுத்தாண்டு பிப்ரவரி இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை முடித்த பிறகு பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் ரூ. 20 லட்சம் மதிப்பில் மற்ற எஞ்சிய வாய்க்கால்கள் தூர்வாரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் சுந்தரவிமலநாதன் கூறியதாவது: தூர்வாரும் பணியை வாய்க்காலின் இறுதி பகுதியிலிருந்து தொடங்கினால் தான் தண்ணீர் கடைமடை பகுதி வரை செல்லும். வாய்க் காலின் இருகரையையும் அளவீடு செய்து, கரைகளை பலப்படுத்தி அதில் பனைமரக்கன்றுகளை நட வேண்டும். முன்மாதிரியாக அனுதிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் எவ்வித முறைகேடுகளும் இல்லாமல் இருக்க விவசாயிகள் ஒத்துழைப்பை தருவோம் என்றார். #ONGC
    ×