என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thadikkombu Perumal temple"

    • தாடிக்கொம்பு சவுந்தர ராஜப் பெருமாள் கோவிலில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தாய்மார்களுக்காக பாலூட்டும் அறை செயல்பட உள்ளது.
    • பக்தர்களின்கோரிக்கைகளை ஏற்று ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமி பைரவர் பூஜையை முன்னிட்டு அவர்களுக்கு அன்னதானமும் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் வழங்கப்பட உள்ளது.

    தாடிக்கொம்பு:

    திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு சவுந்தர ராஜப் பெருமாள் கோவிலில் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தாய்மார்களுக்காக பாலூட்டும் அறை செயல்பட உள்ளது.

    இந்த கோவிலில் அறங்கா வலர்கள் பதவி ஏற்ற பின்பு கோவில் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் குப்பைகள் இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டு சுகாதாரம் பேணி காக்கப்படுகிறது.

    பக்தர்களி ன்கோரிக்கை களை ஏற்றுஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமி பைரவர் பூஜையை முன்னிட்டு அவர்களுக்கு அன்னதானமும் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளையும் அறங்காவலர் குழு சார்பாக சிறந்த முறையில் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    இதுபோன்று பக்தர்க ளின் கோரிக்கையை ஏற்று உடனுக்குடன் அதனை நிறைவேற்றி வரும் அறங்காவலர் குழு தலைவர் டாக்டர் விக்னேஷ் பாலாஜி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வாசு தேவன், சுசீலா, கேப்டன் பிரபாகரன், ராமானுஜம், செயல் அலுவலர் மற்று ம்கோவில் பட்டாச்சாரி யார்கள், கோவில் பணி யாளர்கள் ஆகியோருக்கு பக்தர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    ×