search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temporary Teaching Posts"

    • தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 6-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    • பள்ளிகளில் 2022-23-ம் கல்வியாண்டில் 2022 ஜூன் 1 நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    கோவை:

    அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை ஆகிய பள்ளிகளில் 2022-23-ம் கல்வியாண்டில் 2022 ஜூன் 1 நிலவரப்படி காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரி யர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

    தகுதியான விண்ணப்பதாரர்கள், எழுத்து மூலமாக விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வி சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    காலிப்பணியிட விவரங்கள் முதன்மை கல்வி, மாவட்ட கல்வி, வட்டார கல்வி அலுவலக அறிவிப்பு பலகையில் வெளியிடப்படுகிறது. விண்ணப்பிக்க வருகிற 6-ந் தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். குறிப்பிடட நேரத்திற்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

    விண்ணப்பங்களை கோவை, பேரூர், சர்க்கார் சாமகுளம், பொள்ளாச்சி ஆகிய கல்வி மாவட்ட மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கலாம்.

    இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

    ×