search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teenager demonstration"

    சத்துணவு அமைப்பாளர் பணியை தனக்கு தரக்குகோரி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கணவருடன் இளம்பெண் திடீரென உண்ணாவிரதம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள தனிச பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 40). இவரது மனைவி ரேவதி (32). இன்று காலை கணவனும் மனைவியும் கடலூர் புதிய கலெக்டர் அலவலகம் வந்தனர்.

    பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் தரையில் அமர்ந்து திடீரென்று உண்ணாவிரதம் இருந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதுநகர் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். உண்ணாவிரதம் இருந்த ரேவதி மற்றும் பாஸ்கரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ரேவதி போலீசாரிடம் மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் தனிசபாக்கத்தில் வசித்து வருகிறோம். இந்த பகுதி அண்ணாகிராமம் ஒன்றியத்துக்கு உட்பட்டதாகும். கடந்த பிப்ரவரி மாதம் அண்ணாகிராம ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு அமைப்பாளர் பணிக்காக நேர்முக தேர்வு நடைபெற்றது. இதில் நான் கலந்து கொண்டேன்.

    என் கணவர் தலையில் அடிப்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னுடன் நேர்முகதேர்வு எழுதிய பலருக்கு வேலை கிடைத்துவிட்டது. ஆனால் எனக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. இந்த பகுதியில் உள்ள சத்துணவு அமைப்பாளர் பணியை எனக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இதனைத்தொடர்ந்து போலீசார் ரேவதியை கலெக்டர் அலுவலகத்துக்குள் அழைத்து சென்றனர். பின்னர் அவர் அங்கிருந்த அதிகாரியிடம் தனது கோரிக்கை மனுவை கொடுத்தார். 

    ×