என் மலர்
நீங்கள் தேடியது "ஆசிரியையிடம் போலீசார் விசாரணை"
- தனித்தனி ஆசிரியர்களை நிய மிக்க வேண்டும்
- போலீஸ் அதிகாரிகள் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலையில் அத்தனாவூர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை 135 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 2 ஆசிரியைகள் பணி புரிந்து வருகின்றனர்.
நேற்று மூன்றாம் வகுப்பு மாணவ-மாணவிகளை, ஆசிரியை ஆங்கில பாடத்தில் தேர்வு எழுத வைத்துள்ளார்.
இதனை சரியாக எழுத வில்லை எனக்கூறி பள்ளிக் குழந்தைகளை மூங்கில் கம்பால் கால், தலையில் சர மாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. வலி தாங்கமுடியா மல் மாணவ - மாணவிகள் அலறி துடித்துள்ளனர்.
மாலையில் பள்ளி முடித்ததும் வீட்டிற்குச் சென்ற மாணவ- மாணவிகள் இது குறித்து தங்களது பெற்றோர்க ளிடம் கூறி அழுதுள்ளனர். தலையிலும், கால்களிலும் காயங்களைப் பார்த்த பெற் றோர்கள், உடனடியாக அவர்களை ஏலகிரி மலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச் சைக்காக அனுமதித்துள்ள னர்.
10-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகளை தாக் கியதாககூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சசி ரேகா, புவிநிலா, தமிழரசன், விசாலினி, பூவரசன் 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்து பெற்றோர்கள் உடனடியாக ஏலகிரிமலை போலீஸ் நிலையத்திற்கு தக வல் தெரிவித்தனர்.
இது குறித்து பெற்றோர்கள் கூறியதாவது:-
குழந்தைகளை அடித்த ஆசி ரியை உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அனைத்து வகுப்புகளுக்கும் தனித்தனி ஆசிரியர்களை நிய மிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இந்த நிலையில் பள்ளி மாணவர்களை தாக்கிய ஆசிரியையிடம் போலீசார், கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்






