என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உபகரணங்கள்"

    • கூட்டுறவு துறையில் காலிப் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது.
    • வேளாண் உபகரணங்களை வாடகைக்கு விடும் திட்டத்தை அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும்.

    மெலட்டூர்:

    சாலியமங்களத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது .

    மாவட்ட துணை செயலாளர் செல்வம் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விவசாய கடன் வழங்குதல், உரம் வழங்குதல், குறுவை தொகுப்பு திட்டம், பொங்கல் தொகுப்பு உள்பட அவ்வப்போது அரசு அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

    கூட்டுறவு துறையில் காலிப் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படா மல் உள்ளது.

    இதனால் ஆட்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது .

    இந்நிலையில் வேளாண் உபகரணங்களை விலைக்கு வாங்கி கூட்டுறவு சங்கம் மூலம் வாடகைக்கு விடும் திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது.

    இத்திட்டத்தை செயல்படுத்த கூட்டுறவு வங்களில் போதுமான ஊழியர்கள் இல்லை.

    அதனால் இத்திட்டத்தை கைவிட கோரி தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கி ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அரசு உடனடியாக இத்திட்ட த்தை கைவிட வேண்டும். தவறும்பட்சத்தில் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இதில் ஒன்றிய நிர்வாகிகள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×