என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே தொழிலாளர்கள் உண்ணாவிரதம்"

    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 4-வது நாளாக உண்ணாவிரதம் நடந்தது.
    • போராட்டத்தில் மாநில தலைவர் ராஜா ஸ்ரீதர், துணை பொதுச்செயலாளர் மணிவண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் அமைப்பின் சார்பில் சென்னை மூர் மார்க்கெட் வளாகத்தில் கடந்த 8-ந்தேதி உண்ணாவிரதம் போராட்டம் தொடங்கியது.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தனியார் மயமாக்குதலை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 4-வது நாளாக உண்ணாவிரதம் நடந்தது. நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்ட போராட்டத்தில் தெற்கு ரெயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளர் என்.கண்ணையா கலந்து கொண்டு பேசினார்.

    தொழிலாளர் விரோதப் போக்கில் ஈடுபடும் மத்திய அரசு தனது நிலையை மாற்ற வேண்டும், ரெயில்வே துறையில் தனியார் பயன்படுத்துவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

    போராட்டத்தில் மாநில தலைவர் ராஜா ஸ்ரீதர், துணை பொதுச்செயலாளர் மணிவண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×