என் மலர்
நீங்கள் தேடியது "மின்துறை ஊழியர்கள் போராட்டம்"
தற்போது அரசு மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
புதுச்சேரி:
யூனியன் பிரதேசங்களின் மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதுவை மின்துறை பொறியாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு அமைப்பை ஏற்படுத்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி 1-ந்தேதி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
அவர்களோடு, முதல்-அமைச்சர் ரங்கசாமி, மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், மின்துறை ஊழியர்கள், அரசியல்கட்சியினர், பொதுமக்கள் கருத்துக்களை கேட்டறிந்து அனைவரும் பாதிக்காத வகையில் அரசு நல்ல முடிவெடுக்கும் என உறுதியளித்தனர்.
இதையேற்று போராட்ட குழுவினர் வேலைநிறுத்த போராட்டத்தை நிறுத்தினர்.
தற்போது அரசு மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில், மீண்டும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்தனர். இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் அவர்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். வம்பாகீரப் பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தில் மின் அலுவலகங்களை சேர்ந்த ஊழியர்கள் ஒன்று கூடினர். அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு போராட்டக்குழு தலைவர் அருள்மொழி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வேல்முருகன், ஆலோசகர்கள் ராமசாமி, ராஜேந்திரன், பொறியாளர்கள் சங்க தணிகாசலம், தணிகைவேலன், அச்சுதானந்தம் மற்றும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இன்று முதல் மின்துறையில் எழுத்துப்பணிகளை முழுமையாக புறக்கணிப்போவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து போராட்டக்குழு தலைவர் அருள்மொழி, பொதுச்செயலாளர் வேல்முருகன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு அளித்த வாக்குறுதியை மீறி மின்துறையை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அமைச்சரவை முடிவெடுத்து, மத்திய அரசுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் நாங்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்குகிறோம். அதேநேரத்தில் பொதுமக்களுக்கு தடையில்லாத மின்சாரத்தை வழங்குவோம்.
பொதுமக்களுக்கு எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் எங்கள் போராட்டம் இருக்கும். பொறியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை மட்டும் தொடர்வார்கள். கூடுதல் பணிகளை பார்க்கமாட்டார்கள். எழுத்துப்பணிகளை முற்றிலுமாக தவிர்க்கிறோம். மீட்டர் ரீடிங் எடுக்க மாட்டோம்.
புதிய மின் இணைப்பு தரமாட்டோம். அரசு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் எங்களின் போராட்டம் தீவிரமடையும். போராட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மின்துறை ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
யூனியன் பிரதேசங்களின் மின்துறையை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதுவை மின்துறை பொறியாளர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் தனியார்மய எதிர்ப்பு போராட்டக்குழு அமைப்பை ஏற்படுத்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த பிப்ரவரி 1-ந்தேதி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
அவர்களோடு, முதல்-அமைச்சர் ரங்கசாமி, மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், மின்துறை ஊழியர்கள், அரசியல்கட்சியினர், பொதுமக்கள் கருத்துக்களை கேட்டறிந்து அனைவரும் பாதிக்காத வகையில் அரசு நல்ல முடிவெடுக்கும் என உறுதியளித்தனர்.
இதையேற்று போராட்ட குழுவினர் வேலைநிறுத்த போராட்டத்தை நிறுத்தினர்.
தற்போது அரசு மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து தனியார்மய எதிர்ப்பு போராட்டக் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில், மீண்டும் போராட்டம் நடத்துவது என முடிவு செய்தனர். இன்று (திங்கட்கிழமை) முதல் மீண்டும் அவர்கள் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். வம்பாகீரப் பாளையத்தில் உள்ள மின்துறை தலைமை அலுவலகத்தில் மின் அலுவலகங்களை சேர்ந்த ஊழியர்கள் ஒன்று கூடினர். அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு போராட்டக்குழு தலைவர் அருள்மொழி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வேல்முருகன், ஆலோசகர்கள் ராமசாமி, ராஜேந்திரன், பொறியாளர்கள் சங்க தணிகாசலம், தணிகைவேலன், அச்சுதானந்தம் மற்றும் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இன்று முதல் மின்துறையில் எழுத்துப்பணிகளை முழுமையாக புறக்கணிப்போவதாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து போராட்டக்குழு தலைவர் அருள்மொழி, பொதுச்செயலாளர் வேல்முருகன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசு அளித்த வாக்குறுதியை மீறி மின்துறையை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அமைச்சரவை முடிவெடுத்து, மத்திய அரசுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் நாங்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்குகிறோம். அதேநேரத்தில் பொதுமக்களுக்கு தடையில்லாத மின்சாரத்தை வழங்குவோம்.
பொதுமக்களுக்கு எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் எங்கள் போராட்டம் இருக்கும். பொறியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை மட்டும் தொடர்வார்கள். கூடுதல் பணிகளை பார்க்கமாட்டார்கள். எழுத்துப்பணிகளை முற்றிலுமாக தவிர்க்கிறோம். மீட்டர் ரீடிங் எடுக்க மாட்டோம்.
புதிய மின் இணைப்பு தரமாட்டோம். அரசு எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் எங்களின் போராட்டம் தீவிரமடையும். போராட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மின்துறை ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.






