search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவை நியூஸ்"

    தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    கோவை, 

    அன்றாட சமையலுக்கு தேவையான முக்கியமான உணவுப் பொருளாக தக்காளி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழை மற்றும் பனிக்காலத்தின் போது தக்காளி பூக்கள் கருகியும், உதிர்ந்தும் விடுவதால் அந்த காலகட்டத்தில் விலை அதிகரித்து மக்களை சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. இந்த காலத்தில் தக்காளி விலை அதிகபட்சமாக ரூ.200 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    ஆப்பிள் பழத்தின் விலையும், தக்காளியின் விலையும் ஒரே அளவில் இருப்பது போன்ற புகைப்படங்கள் கடந்தாண்டு சமூக வலைதளங்களில் வைரலானது நினைவிருக்கலாம். இதனிடையே மழைக்காலம் தொடங்க இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், கோவையில் தற்போது முதலே தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

    கோவையில் உள்ள காய்கறி சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனை கடைகளில் ரூ.120 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது. உணவில் தக்காளி சேர்க்காவிட்டால் சுவையே இருக்காது என்றும், இப்போது வேறு வழி இல்லாமல் புளியைக் கரைத்து தான் சமைக்க வேண்டும் என்று வேதனை தெரிவிக்கின்றனர் மக்கள். 
     
    தக்காளி பயிர் நஷ்டத்தை ஏற்படுத்தி விடுவதால் கோவை சுற்றுவட்டாரத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் தக்காளியை பயிரிடாமல் இருந்ததும், வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி இறக்குமதியாவதுமே இந்த விலையேற்றத்திற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து இல்லத்தரசி ஒருவர் கூறியதாவது:-

    தக்காளி இல்லாமல் எந்த ஒரு உணவும் சமைக்க முடியாது. தக்காளியை குறைத்துக் கொண்டு சமையல் செய்தால் உணவின் ருசியும் குறைவாகத்தான் இருக்கும். தக்காளி விலை உயர்வுக்கு பின்னர் தக்காளி  சட்னி, தக்காளி சாப்பாடு ஆகியவை சாப்பிட்டு பல வாரங்கள் ஆகிவிட்டது.

    மொத்த வியாபா–ரிகளிடம் வாங்கலாம் என நினைத்தால் குறைந்தது 10 கிலோ வாங்க கூறுகிறார்கள். வீட்டின் அருகே உள்ள கடைகளில் வாங்கச் சென்றால் தக்காளி விலை ரூ.120-க்கு விற்பனை செய்கிறார்கள். எனவே தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
    இவ்வாறு அவர் கூறினார்.

    ×