search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Robotic machine"

    பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு நகரில் பல இடங்களில் கழிவுநீர் வழிந்தோடுகிறது.

    உடுமலை:

    உடுமலை நகராட்சியில் பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு நகரில் பல இடங்களில் கழிவு நீர் வழிந்தோடுகிறது. இந்தநிலையில் சாக்கடை அடைப்பை நீக்க மனிதர்கள் இறங்குவதை தவிர்க்கும் வகையிலும் பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்ய அடைப்புகளை நீக்கி கழிவுகளை வெளியேற்றும் வகையிலும் ரோபோட்டிக் எனும் தானியங்கி எந்திரம் வாங்கப்பட்டுள்ளது.

    உடுமலை நகர்மன்றத்தலைவர் மத்தீன் மற்றும் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், நகர்மன்ற துணைத் தலைவர் கலைராஜன், கவுன்சிலர்கள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் எந்திரம் பரிசோதிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. 

    ×