என் மலர்
நீங்கள் தேடியது "PUBLIC FOR ROAD BLOCKADE பொதுமக்கள் சாலை மறியல்"
கோவில் திருவிழாவில் முன்னுரிமை வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:
வடகாடு அருகே மாங்காட்டில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வைகாசி தேரோட்ட திருவிழாவின் முதல்நாள் நிகழ்ச்சியான காப்புக்கட்டு நிகழ்ச்சியின்போது தங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி
அதே கிராமத்தை சேர்ந்த ஒரு தரப்பினரை சேர்ந்த பொதுமக்கள் வடகாடு பேப்பர் மில் ஆலங்குடி-பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மறியலில் ஈடுபட்டவர்களை ஆலங்குடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் பேச்சவார்த்தை நடத்தினர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் ஆலங்குடி-பட்டுக்கோட்டை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






