search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thambaram commissioner"

    ஓய்வுபெறுவதால் காவல் சீருடை அணிய முடியவில்லை என்பது மிகவும் வருத்தம் என்று தாம்பரம் டிஜிபி ரவி கூறினார்.
    தாம்பரம் காவல் ஆணையர் டி.ஜி.பி. ரவி இன்றுடன் தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

    இந்நிலையில், பணி ஓய்வு பிரிவு உபசார விழாவில் தாம்பரம் காவல் ஆணையர் ரவி கூறியதாவது:-

    மக்களின் பணிதான் முக்கியம். மற்றவர்களின் நலனுக்காக வாழ வேண்டும். நாம் அதிகாரிகள், அலுவலர்கள் இல்லை. மக்கள்தான் நமக்கு எஜமானர்கள்.

    அரசாங்கம் வாய்ப்பு கொடுத்த போதெல்லாம் நான் மக்களுக்கு சேவையாற்றி உள்ளேன்.

    காவலர்கள் உடல்நிலையை நன்றாக வைத்திருந்தால்தான், மக்கள் சேவையை சிறப்பாக செய்ய முடியும்.

    தவறு யார் செய்தாலும் தவறுதான். சட்டம்- ஒழுங்கு பிரச்னையை கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும்.

    வாழ்க்கை ஒரு சக்கரம். ஓய்வுபெறுவதால் காவல் சீருடை அணிய முடியவில்லை என்பது மிகவும் வருத்தம்.

    காவல் பணியைதான் முடிக்கிறேன். மக்கள் பணி தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. பாராளுமன்ற மேல்சபை தேர்தல்- மனுதாக்கல் இன்றுடன் நிறைவு
    ×