search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செய்யாறில் புகையிலை எதிர்ப்பு தின மனித சங்கிலி விழிப்புணர்வு Anti-Tobacco Day Human Chain Awareness in Action"

    செய்யாறில் புகையிலை எதிர்ப்பு தின மனித சங்கிலி விழிப்புணர்வை ஓ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ராந்தம் கிராமத்தில் புகையிலை எதிர்ப்பு மனித சங்கிலி விழிப்புணர்வு நடைபெற்றது. எம்எல்ஏ ஓ.ஜோதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகையிலை எதிர்ப்பு மனிதசங்கிலி விழிப்புணர்வை தொடங்கி வைத்தார். 

    அப்போது ஒரு போதும் புகை பிடிக்கவோ அல்லது புகையிலை பொருட்களை யாதொரு வடிவிலும் உட்கொள்வதற்கு அனுமதிக்க மாட்டோம் என உறுதி அளிக்கிறேன் என உறுதிமொழி ஏற்கச் செய்தார். 

    இதில் வெம்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் ராஜூ, ஒன்றிய செயலாளர் தினகரன், கவுன்சிலர் ஞானவேல், ஊராட்சி மன்ற தலைவர் அமுதா கிருஷ்ணன், வட்டார மருத்துவர் வினோத்குமார் உள்ளிட்ட கிராமத்தில் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
    ×