என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 330475
நீங்கள் தேடியது "திருவள்ளூர் வாலிபர் பலி"
திருவள்ளூர் அருகே வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே உள்ள புங்கத்தூர் பகுதியை சேர்ந்த பூவரசன் (வயது24). தனியார் கம்பெனியில் வெல்டராக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் பூவரசன் ராமதண்டலம் கிராமத்தில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்தார். நேற்று இரவு திருவள்ளூர் - செங்குன்றம் சாலை மூலக்கரை பகுதியில் ரத்த வெள்ளத்தில் பூவரசன் இறந்து கிடந்தார்.
தகவல் அறிந்ததும் வெங்கல் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பூவரசன் விபத்தில் பலத்த காயமடைந்து உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
ஆனால் பூவரசன் உடல் கிடந்த இடம் அருகே அவரது மோட்டார் சைக்கிள் ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. எனவே மர்ம நபர்கள் பூவரசனை அடித்து கொலை செய்து இருக்கலாம் என்று அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
திருவள்ளூர் அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளுர்:
சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (40). இவர் மப்பேடு பகுதியில் உள்ள சிங்கீஸ்வரர் கோவிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக திருப்பணியில் ஈடுபட்டு வந்தார்.
இவர் கோவில் அருகே உள்ள குளத்தில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியானார். உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X