என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜெயங்கொண்டத்தில் முதியவர் மயங்கி விழுந்து சாவு"

    • இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி (வயது 70)
    • எதிர்பாராதவிதமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி (வயது 70)

    இவர் தனது ஊரிலிருந்துஜெயங்கொண்டம் வாரச்சந்தையில் காய்கறி வாங்க சந்தைக்கு வந்துவிட்டு மேலும் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக 4 ரோட்டில் இருந்து சிதம்பரம் ரோட்டில் உள்ள மளிகை கடைக்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.இதில் மயங்கி கீழே விழுந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×