என் மலர்
நீங்கள் தேடியது "வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்"
- கலெக்டர் வழங்கினார்
- மாவட்ட அளவில் நடந்தது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்கள் 5 பேர், கல்லூரி மாணவர்கள் 3 பேர் மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிறந்தநாள் அன்று கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கு பரிசுத் தொகை பாராட்டுச் சான்றிதழும், திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றிபெற்ற 4 மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, மாணவ மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசு தொகை வழங்கினர். அப்போது தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் பாரதி உடன் இருந்தார்.






