என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றவாளிகளை கையாள்வது குறித்து விழிப்புணர்வு முகாம்"

    • குற்றவாளிகளை கையாள்வது குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • மாவட்ட எஸ்.பி.தலைமையில் நடைபெற்றது.

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி சரக காவல் நிலையத்துக்குட்பட்ட குற்றவாளிகளை காவல் நி லையத்தில் அடைக்கும் போது எப்படி அவர்களிடம் நடந்து கொள்ளவேண்டும் என்பது பற்றி மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் தலைமையில் விழிப்புணர்வு முகாம் ஆலங்குடி காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சரக துணை காவல் சூபிரண்ட் ஆப் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட 9 காவல் நிலையங்கள் உள்ளது. இதில் ஆலங்குடி, வடகாடு, கீரமங்கலம், செம்பட்டிவிடுதி, ஆலங்குடி அனைத்து மகளி ர் காவல் நிலையம் மற்றும் மதுவிலக்கு ஆகிய ஆறு காவல் நிலையங்களும், கறம்பக்குடி, மழையூர், ரெகுநாதபுரம் ஆகிய 3 காவல் நிலையங்கள் என மொத்தம் 9 காவல் நிலையங்கள உள்ளன.

    இந்த காவல் நிலையங்களுக்குப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யப்படும் போதும், அவர்களை காவல் நிலையத்தில் போலீசார் அடைக்கும்போதும் போலீசார் எப்படி கையாளவேண்டும், அதன் வழிமுறைகள் என்ன என்பது குறித்து மாவட்ட எஸ்பி நிஷா பார்த்திபன் போலீஸாருக்கு வி ளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    விழிப்புணர்வு முகாமில் ஆலங்குடி டிஎஸ்பி வடிவேல் உள்பட 9 காவல் நிலையங்களில் உள்ள அனைத்து காவல் ஆய் வாளர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

    ×