என் மலர்
நீங்கள் தேடியது "மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றவர் மீது வழக்கு"
- மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
- கூலி வேலை செய்து வந்ததாக தெரிகிறது
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வாணக்கன்காடு கருக் காக்குறிச்சி ராஜாகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஆத்மநாதன் மகள் காளீஸ்வரி (வயது 19). இவர் ஆலங்குடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் 2-ஆம் ஆண்டு பி,காம் படித்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த வீரப்பன் மகன் தர்மராஜ். இவர் திருப்பூரி ல் கூலி வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது.இவர் திருப்பூரில் இருந்து 10 நாட்களுக்கு முன்பு தனது சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் காளீஸ்வரி சைக்கிளில் கோபிநாத் நிலம் அருகே வந்தபோது, இவரை தர்மராஜ் இழுத்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளாராம். இச்சம்பவம் குறித்து அனைத்து மகளிர் நிலைத்தில் காளீஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சப் - இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி வழக்குப்பதிவு செய்து மேல் விசாரனை நடத்தி வருகின்றனர்.






