என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணி"

    • ரெயில்வே மேம்பால சீரமைப்பு பணிகள் மந்தமாக நடப்பதாக பல்வேறு தரப்பினர் புகார்
    • கலெக்டர், எம்.பி. ஆய்வு

    வேலூர்:

    காட்பாடி ரெயில்வே மேம்பால சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் சித்தூர் செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்படுகின்றன. ரெயில்வே மேம்பாலம் சீரமைப்பு பணிகள் மந்தமாக நடந்து வருவதாக பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் ரெயில்வே மேம்பால சீரமைப்பு பணிகளை கலெக்டர் குமாரவேல் பாண்டியன்,டி.ஐ.ஜி.ஆனி விஜயா, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:-

    காட்பாடி ரெயில்வே மேம்பாலம் மிக முக்கியமானதாகும். இந்த மேம்பாலத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட இருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த பணிகள் ஒத்திவைக்கப்பட்டது.

    நீர்வளத் துறை அமைச்சர் உத்தரவின் பேரில் தற்போது சீரமைப்பு பணிகள் நடந்தது. கடந்த 5 நாட்களுக்கு முன்பு பாலத்தில் இணைப்புகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு விட்டன.இதில் சிமெண்ட் கலவை பூச்சு பூசப்பட்டுள்ளது. இவை 15 முதல் 20 நாட்களுக்கு பிறகுதான் தரமானதாக மாறும்.

    எனவே திட்டமிட்டபடி வருகிற ஜூலை 1-ந் தேதிக்குள் காட்பாடி ரெயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டு போக்குவரத்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ×