search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Synthetic fiber clothing"

    • பின்னலாடை ஏற்றுமதி ஆர்டர்களை பெற்று உற்பத்தி பரபரப்பாக மாறியுள்ளது.
    • செயற்கை நூலிழை ஆடைகளுக்கான ஆர்டர் வரத்தும், விசாரணையும் அதிகரித்துள்ளது.

    திருப்பூர் :

    கொரோனா தொற்றால் சர்வதேச நாடுகளில் தொழில்கள் முடங்கினாலும் இந்தியாவின் உள்நாட்டு ஜவுளி வர்த்தகம் நிலை பெற்று விளங்கியது. ஒரு சில மாதங்களில் கொரோனா பாதிப்புகளை பின்னுக்கு தள்ளி திருப்பூர் ஏற்றுமதியாளர்களும் தங்கள் இடத்தை தக்கவைத்துக்கொண்டனர்.

    உக்ரைன் போர் சூழல் காரணமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார மந்த நிலை உருவானது. கடந்த ஆங்கில புத்தாண்டுக்கு பிறகு அந்நாடுகளில் படிப்படியாக இயல்புநிலை திரும்பியது. நூல் விலை உயர்வால் பாதிக்கப்பட்ட திருப்பூரிலும் பின்னலாடை ஏற்றுமதி ஆர்டர்களை பெற்று உற்பத்தி பரபரப்பாக மாறியுள்ளது.

    நூல் விலை குறைய துவங்கிய போது ஏற்கப்பட்ட ஆர்டர்கள் தற்போது ஏற்றுமதியாகி வருகின்றன. இந்தியாவின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி கடந்த மாதம் 12 ஆயிரத்து 227 கோடி ரூபாய் அளவுக்கு நடந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மார்ச் மாத ஏற்றுமதி, இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வாக இருக்கும். பிப்ரவரி மாத ஏற்றுமதியை சேர்த்தாலே கடந்த ஆண்டின் மொத்த ஏற்றுமதியை தொட்டுவிடலாம் என ஜவுளித்துறையினர் கணித்துள்ளனர்.

    திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியை பொறுத்தவரை இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மாதம் மட்டும் 3,383 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 11.12சதவீதம் அதிகம்.கடந்த 2011-22ல் அதிகபட்சமாக டிசம்பர் மாதம் 3,296 கோடிக்கு ஏற்றுமதி நடந்துள்ளது. அதை மிஞ்சும் அளவுக்கு கடந்த மாத ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இது பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தொழில்துறையினர்தெரிவித்தனர்.

    திருப்பூரில் இருந்து ஏற்றுமதியாகும் பருத்தி நூலிழை பின்னலாடைகளுக்கு பல்வேறு நாடுகளில் வரவேற்பு அதிகம். திருப்பூர் ஏற்றுமதியாளர் கோடைக்கால ஆர்டர்களை மட்டுமே அதிகம் நம்பியிருக்கின்றனர். இந்நிலையை மாற்றிட செயற்கை நூலிழை பின்னலாடை உற்பத்தியும், வர்த்தகமும் ஊக்குவிக்கப்படுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்தாண்டில் மதிப்பு கூட்டப்பட்ட செயற்கை நூலிழை ஆடைகளுக்கான ஆர்டர் வரத்தும், விசாரணையும் அதிகரித்துள்ளது. இதனால் வரும் மாதங்களில் புதிய ஆர்டர் வரத்து திருப்பூருக்கு திருப்புமுனையாக அமையும் என ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • பருத்தி ஆடைகளை திருப்பூரில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • ஆண்டுதோறும் 200 சதவீதம் வளர்ச்சியை செயற்கை நூலிழை ஆடைகள் பெற்றுள்ளன.

    திருப்பூர் :

    ஆயத்த ஆடை உற்பத்தி துறையில் பருத்தி ஆடைகளை திருப்பூரில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் சவால்கள் அதிகரித்து வருவதால் செயற்கை நூலிழை துணிகள் மற்றும் ஆடைகள் உற்பத்தியை ஏற்றுமதியாளர்கள் கவனத்தை திருப்ப வேண்டிய நிலையில் உள்ளனர். ஆண்டுதோறும் 200 சதவீதம் வளர்ச்சியை செயற்கை நூலிழை ஆடைகள் பெற்றுள்ளன.

    திருப்பூரில் கடந்த 16 ஆண்டுகளுக்கும் மேலாக செயற்கை நூலிழை துணி மறறும் ஆடை உற்பத்தியில் கடும் சவால்களை எதிர்கொண்டு அதன் நுணுக்கங்களையும், தொழில் நுட்பங்களையும் கற்று தற்போது ரூ.200 கோடி அளவுக்கு வர்த்தகம், ஆர்டர்களை மேற்கொண்டு வரும் டெக்னோ ஸ்போர்ட்ஸ் நிறுவனரான சுனில் ஜூன் ஜூனவாலா ஆடை தயாரிப்பு, உற்பத்தி, சந்தை வாய்ப்புகள், முதலீடுகள் குறித்து தெரிவிக்க உள்ளார்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் இளம் ஏற்றுமதியாளர்கள் துணைக்குழு சார்பாக ஒவ்வொரு மாதமும் வர்த்தகத்துக்கு உதவும் கருத்தரங்கு நடத்தப்படும். நாளை 6-ந்தேதி திருமுருகன்பூண்டியில் உள்ள பாப்பிஸ் விஸ்டா ஓட்டலில் நடக்கும் கருத்தரங்கில் சுனில் ஜூன்ஜூனவாலா பங்கேற்று பேசுகிறார். இதை ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×