என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swing lullaby"

    • சிறப்பு மகா வேள்வி பூஜை நடைபெற்றது
    • பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமம் ஏரிக்கரை ஓரத்தில் 81 அடி உயரமும் 18 கரங்களும் கொண்ட சர்வ மங்கள காளி முத்துமாரியம்மன் ேகாவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் மார்கழி மாத அமாவாசை முன்னிட்டு சர்வ மங்களகாளி அம்மன் காலை முதல் சிறப்பு பூஜைகள் மற்றும் பால் தயிர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மற்றும் மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பல்வேறு மூலிகைகள் கொண்ட சிறப்பு மகா வேள்வி பூஜை நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து மூலவர் அம்மன் மார்கழி மாதத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அலங்காரத்தி லும், உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இரவு பக்தர்கள் பங்கேற்று அம்மனை தோளில் சுமந்தவாறு கோயிலை மூன்று முறை சுற்றி வந்து ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி நடைபெற்று நிறைவு பெற்றது.

    • அன்னபூரணி அலங்காரத்தில் முத்துமாரியம்மன் அருள் பாலித்தார்
    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த மாம்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆனி மாதம் அமாவாசை முன்னிட்டு ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி நேற்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டது.

    பின்னர் நள்ளிரவு 12 மணி அளவில் அம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சி நடந்தது. அன்னபூரணி அலங்காரத்தில் முத்துமாரியம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×