என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Survey of grocery stores"

    • 40-க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • 2 கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவின் பேரில், நீலகிரி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ் மற்றும் அலுவலர்கள் கோத்தகிரி தினசரி மார்க்கெட், பஸ்நிலையம், ராம்சந்த் சதுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது உணவுப் பொருட்களின் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியாகும் தேதி அச்சிடப்பட்டு உள்ளதா? உரிய தரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட எடையுடன் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை மேற்கொண்டனர்.மேலும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில் உணவு பாதுகாப்பு உரிமம் பெறப்பட்டுள்ளதா என்பதையும் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து பழக்கடைகளில் விற்பனை செய்யபடும் பழங்கள் கார்பைடு கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்டுள்ளதா ? எனவும் ஆப்பிள் பழங்களின் மேல் மெழுகு பூச்சு உள்ளதா, என ஆய்வு செய்தனர்.

    ஆய்வில் பஸ் நிலையத்தில் உள்ள 2 கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 கடைக்காரர்களுக்கும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அதிகாரிகள் கூறுகையில், உணவு பொருட்கள் விற்பனை செய்யும் அனைத்து கடை உரிமையாளர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் கட்டாயம் பெற வேண்டும். உரிமம் இன்றி உணவு பொருட்களை விற்பனை செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தனர். 

    ×