search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Supreme Court officials"

    அனில் அம்பானி வழக்கு தொடர்பாக இணையதளத்தில் தவறான தகவலை பதிவிட்ட சுப்ரீம் கோர்ட் அதிகாரிகள் 2 பேரை பணிநீக்கம் செய்து, அவர்களை கைது செய்ய தலைமை நீதிபதி உத்தரவிட்டார். #AnilAmbani #SupremeCourt
    புதுடெல்லி:

    ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் தலைவர் அனில் அம்பானிக்கு எதிராக எரிக்சன் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த கோர்ட் அவமதிப்பு வழக்கு, கடந்த ஜனவரி 7-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, அனில் அம்பானி, கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஆர்.எப்.நாரிமன் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.

    ஆனால், நீதிபதி உத்தரவை குறிப்பெடுத்து சுப்ரீம் கோர்ட் இணையதளத்தில் பதிவு செய்யும் அதிகாரிகள் 2 பேர், அனில் அம்பானி ஆஜராக தேவையில்லை என்று நீதிபதி உத்தரவிட்டதாக தவறான தகவலை இணையதளத்தில் பதிவிட்டனர். இத்தகவலை எரிக்சன் நிறுவன வக்கீல், நீதிபதி நாரிமன் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதுபற்றி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் நீதிபதி நாரிமன் புகார் செய்தார்.

    அதையடுத்து, தலைமை நீதிபதி உத்தரவுப்படி, மணவ், தபன் என்ற 2 அதிகாரிகளும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. #AnilAmbani #SupremeCourt
    ×