என் மலர்
நீங்கள் தேடியது "Students travel by hanging on the steps of the bus"
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
- சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவல்
ஆரணி:
ஆரணி டவுன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் ஆரணி டவுன் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் படித்து வருகின்றன.
தினந்தோறும் பஸ் மூலம் பயணம் செய்து வருகின்றனர்.
பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவ மாணவிகள் ஒரே நேரத்தில் பழைய, புதிய பஸ் நிலையங்களில் குவிந்து கிராமத்திற்கு செல்லும் பஸ்களில் முண்டியடித்து கொண்டு ஏறுகின்றனர்.
இந்த நிலையில் ஆரணி பஸ் நிலையத்திலிருந்து தேவிகாபுரம் செல்லும் அரசு பஸ்சில் அதிகளவிலான மாணவ மாணவிகள் ஆபத்தான முறையில் பஸ் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர்.
இச்சம்பவம் தற்போது சமூக வளைதலங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இதனால் உரிய நடவடிக்கை எடுத்து கூடுதல் பஸ்சை இயக்கி மாணவ மாணவிகளின் நலனை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






