search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Students Parcipated"

    • காவல்துறை துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் மினிமாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • மாரத்தான் போட்டியில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே கடம்பூர் காவல் நிலையத்தின் சார்பில் இன்று காலை 7 மணி அளவில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மாற்றத்தை தேடி என்ற தலைப்பில் மணியாச்சி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் 5 கிலோ மீட்டர் தொலைவில் மினிமாரத்தான் போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டியில் கடம்பூர் மற்றும் சிதம்பராபுரம் சாலை புதூர், கோடாங்கால் ஆகிய கிராமங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பள்ளி மாணவ-மாணவிகள், காவல்துறையை சேர்ந்த ஆண், பெண் ஆகியோர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் 8 வயது, 12,16,25,என்பவர் வேறு தரப்பில். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் இரண்டு சிறப்பு பரிசுகள் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகளும் வழங்கப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் கடம்பூர், பசுவந்தனை, நாரைகினறு, புளியம்பட்டி ஆகியோர் காவல்நிலையங்களைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சுரேந்திரன், மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். டி.எஸ்.பி.லோகேஸ்வரன் ஏற்பாடுகளையும் கடம்பூர் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் ஆகியோர் செய்தனர்.

    ×