search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Student Molesed"

    • திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி 10-ம் வகுப்பு மாணவியை வாலிபர் கர்ப்பமாக்கியுள்ளார்.
    • மாணவி அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பிரியா வழக்கு பதிவு செய்து, வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த மாத்தூர் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    அதே ஊரை சேர்ந்த சந்தோஷ் (வயது22). இவர் டிராக்டர் டிரைவராக உள்ளார். சந்தோசும், மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவியுடன் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். அது பற்றி சந்தோஷிடம் கூறியதற்கு வெளியில் சொன்னால் உன்னை உயிரோடு விடமாட்டேன் என்று மாணவியை மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த மாணவி இதுகுறித்து தன் தாயாரிடம் கூறினார்.

    இதுகுறித்து அவர்கள் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் பிரியா வழக்கு பதிவு செய்து, சந்தோஷை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    ×