என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Student Improvement Skills Development Program"

    • வி.ஐ.டியில் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழா
    • வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் பாடத்திட்டம் சீரமைக்கப்பட்டுள்ளது.

    வேலூர்:

    பள்ளிக் கல்வியில் கடைசி இடத்திலுள்ள வேலூரை சிறப்பான இடத்துக்கு முன்னேற்ற ஆசிரியர்கள் மேலும் சிறப்பாக செய லாற்ற வேண்டும் என்று விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்க ளின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் சீரமைக்கப்பட் டுள்ளதை அடுத்து மாநில முழுவதும் உள்ள தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இணைய வழி திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

    வேலூர் மாவட்ட தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்திலுள்ள கணினி மையத்தில் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் அளிக்கப்பட்டது. இதன் நிறைவு நாள்நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில், விஐடி வேந்தர் கோ.விசு வநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பயிற்சி பெற்ற ஆசிரியர்களை பாராட்டி பேசியதாவது:-

    மாணவர்களின் கல்வி மேம்பட திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்கல்வி அளிக்கப்பட இருப்பது அவர்களுக்கு நன்மை அளிக்கும். மேலும் பள்ளிக்கல்வியில் கடைசி இடத்தில் உள்ள வேலூர் மாவட்டத்தை சிறப் பான இடத்துக்கு முன்னேற்ற ஆசிரியர்கள் மேலும் சிறப்பாக செயலாற்ற வேண்டும் என்றார்.

    முன்னதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி முன் னிலை வகித்தார். தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் வர வேற்றார். க.ராஜா,எஸ்.ரமேஷ், எம். நாகலிங்கம், கே.பழனி, இ.ராமன் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர். தொழிற்கல்வி ஆசிரியர் கள் சு.செல்வபாரதி, க.சத்யபாமா, ஜி.பொற்செல்வி, ஜி.பழனி, டி.பிச் சாண்டி, எஸ்.கோபி, கே.பி.சிவஞா னம், எஸ்.பிச்சைகண்ணு, ராணிப் பேட்டை மாவட்டத்தின் சார்பில் வேலாயுதம், சந்திரன், அசோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    ×