search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Student hangs herself"

    • உடல்நிலை சரியில்லாததால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் சைதாப்பேட்டை ரோஷன் சுபேதார் தெருவை சேர்ந்தவர் இம்ரானா (வயது 15). இவர் சைதாப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் சிறுமிக்கு கடந்த 10 நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். அவரது பெற்றோர் மகளிடம் விசாரித்த போது நாளை பள்ளிக்கு செல்வதாக தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் சிறுமியின் பெற்றோர் இருவரும் வேலைக்குச் சென்று வேலை முடிந்து மாலை வீடு திரும்பினர்.

    அப்போது வீட்டில் உள்ள மின்விசிறியில் இம்ரானா தூக்கில் தொங்கினார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மகளை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூரை சேர்ந்த மாணவி ஒருவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த இருங்காட்டு கோட்டை பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

    அவர் சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கல்லுரியில் விடுதி அறையில் மாணவி தூக்கில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து மாணவி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லூரியில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு மாணவி தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    ×