search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student eswari"

    பிசியோதெரபிஸ்ட் டாக்டர் கொலை வழக்கில் கூலிப்படையுடன் கைதான மாணவி ஈஸ்வரி திருச்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது.
    திருச்சி:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பியை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் டாக்டரான விஜயகுமார் (வயது 36) என்பவரை திருச்சியை சேர்ந்த மாணவி ஈஸ்வரி (21) என்பவர் கூலிப்படையை ஏவி கடந்த 8-ந் தேதி கொலை செய்தார்.

    இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் ஈஸ்வரி மற்றும் கூலிப்படையை சேர்ந்த மாரி முத்து, கணேஷ், குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் விஜயகுமாரிடம் பறித்த நகை ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    ஈஸ்வரி சென்னை நுங்கம்பாக்கத்தில் தங்கி சி.ஏ. படித்த போது, அங்கு தனியார் ஆஸ்பத்திரியில் பிசியோதெரபிஸ்டாக வேலை பார்த்த விஜயகுமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. விஜயகுமார் தனக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் இருப்பதை மறைத்து ஈஸ்வரியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது ஈஸ்வரியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். தன்னுடன் ஈஸ்வரி உல்லாசமாக இருப்பதை வீடியோவும் எடுத்துள்ளார். விஜயகுமாருக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதை அறிந்ததும், ஈஸ்வரி அவரைவிட்டு விலக தொடங்கியுள்ளார். ஆனால் விஜயகுமார் தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததுடன் தன்னை திருமணம் செய்யாவிட்டால் உல்லாசமாக இருந்த படத்தை யுடியூப்பில் வெளியிடுவதோடு, ஈஸ்வரியின் தந்தை, தங்கையையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியதால் ஆத்திரத்தில் ஈஸ்வரி கூலிப்படையை ஏவி விஜயகுமாரை கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    கைதான கூலிப்படை ஆட்கள் மாரிமுத்து, கணேஷ், குமார் ஆகிய 3 பேரையும் நேற்று போலீசார் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். ஆனால் ஈஸ்வரியை பெண்கள் சிறையில் அடைக்க அழைத்து சென்ற போது சிறைத்துறை போலீசார் மருத்துவ சான்றிதழ் அளித்த பிறகு தான் காவலில் அடைக்க முடியும் என கூறி விட்டனர்.

    இதனால் மாணவி ஈஸ்வரி நேற்று இரவு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இன்று மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

    கொலை செய்யப்பட்ட டாக்டர் விஜயகுமார் தன்னுடன் பலமுறை உல்லாசமாக இருந்ததாக ஈஸ்வரி கூறியுள்ளார். அவருக்கு பாலியல் சோதனை உட்பட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்படுகிறது. மருத்துவ பரிசோதனை முடிந்ததும் ஈஸ்வரி திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்படுவார்.

    இதற்கிடையே ஈஸ்வரி அனுமதிக்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரி அறை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விடிய விடிய போலீசார் பாதுகாப்பிற்கு நின்றிருந்தனர். இரவில் ஈஸ்வரி தனக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி கண்ணீர் வடித்தபடியே இருந்துள்ளார்.
    ×