search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Student complaint against boy"

    • போலீசார் விசாரணை
    • எஸ்.பி. ஆபீசில் நடந்த குறைதீர்வு கூட்டம் நடந்தது

    வேலூர்:

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று நடந்த குறை தீர்வு கூட்டத்தில் டிஎஸ்பி இருதய ராஜன் மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    வேலூர் அடுத்த ரங்காபுரத்தை சேர்ந்தவர் சத்தியபாமா. இடையன் சாத்து அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை செய்து வருகிறார்.

    இவர் அளித்த மனுவில் பள்ளிகொண்டா அடுத்த வெட்டுவானம் பகுதியில் விவசாயம் நிலம் வாங்குவதற்காக பிரவீன் என்பவரிடம் முன்பணமாக ரூ.3 லட்சம் கொடுத்தேன் விவசாய நிலம் வாங்குவதில் வில்லங்கம் இருப்பதால் நிலம் வாங்குவதற்காக கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு கேட்டேன்.

    அவரிடம் இருந்து பணத்தை மீட்டு தருமாறு கூறியுள்ளார்.

    அணைக்கட்டு பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி மனு ஒன்று அளித்தார்.

    அதில் எங்கள் பக்கத்து ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தார்.

    ஊர் பொதுமக்கள் பஞ்சாயத்து கூட்டிய போது 18 வயது முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்தனர்.

    ஆனால் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இது குறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து வாலிபரின் பெற்றோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஆனால் வாலிபரை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுக்கவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என தெரிவித்துள்ளார்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×