என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "STUDENT ADMISSION AWARENESS RALLY"

    • திருச்சி அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சார்பில் மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் சீர்வரிசையாக பள்ளிக்கு தேவையான உபகரணங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர்

    திருச்சி, ஜூன்.14-

    திருச்சி கே.கே.நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி மற்றும் முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மணிகண்டம் வட்டார கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார்.

    மாநகராட்சி கவுன்சிலர் மலர்விழி ராஜேந்திரன் மாணவர் சேர்க்கை பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேரணி கே.கே.நகர் விநாயகர் கோவிலில் இருந்து தொடங்கி கக்கன் காலனி, காந்திநகர், மாதவன் சாலை வழியாக பள்ளியை வந்தடைந்தது. பேரணியில் சேர்ப்பீர், பள்ளியில் மாணவர்களை சேர்ப்பீர், அரசு பள்ளியில் சேர்ப்பீர், அரசு வேலையை வென்றிடுவேன் போன்ற விழிப்புணர்வு வாசகங்களை கூறியபடி சென்றனர்.

    மேலும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் சீர்வரிசையாக பள்ளிக்கு தேவையான உபகரணங்களை ஊர்வலமாக எடுத்து வந்தனர். மேலும் விழாவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் பர்வீன் பானு மற்றும் டி.ஆர்.டி.இ. பாலகுமார், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம், முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த பேரணி முடிந்து பள்ளி வந்ததும் முதல் வகுப்பு மாணவர்களுக்கு நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்து, மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் வனஜா செய்திருந்தார்.

    • பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும், இடைநிற்றலை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தும் விதமாக காருகுடி கிராமத்தின் முக்கிய வீதிகளில் பேரணி சென்றனர்.
    • நீட் மற்றும் ஜே.இ.இ போன்ற நுழைவு தேர்வுகளில் 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடும், அரசு வேலை வாய்ப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது போன்ற அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டது.

    திருச்சி:

    தா.பேட்டை அடுத்த காருகுடி கிராமத்தில்ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் காருகுடி அரசு உயர்நிலைப் பள்ளி இணைந்து மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    ஊராட்சி மன்ற தலைவர் சிவகாமி செல்வராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தலைமை ஆசிரியர்கள் கீதா, கலாராணி, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    அரசுப்பள்ளியில் சேர்வோம்! ஆனந்தமாய் கற்போம் என்ற முழக்கத்தோடும், பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும், இடைநிற்றலை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தும் விதமாக காருகுடி கிராமத்தின் முக்கிய வீதிகளில் பேரணி சென்றனர்.

    மேலும் தமிழகஅரசின் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பாடநூல் குறிப்பேடு, புத்தகப்பை, காலணிகள், சீருடை,வண்ண பென்சில்கள், கணித உபகரணப்பெட்டி, மிதிவண்டி போன்ற அனைத்தும் வழங்கப்படுவதோடு

    நீட் மற்றும் ஜே.இ.இ போன்ற நுழைவு தேர்வுகளில் 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடும், அரசு வேலை வாய்ப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது போன்ற அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டது.

    பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கிராம பொதுமக்கள் உட்பட பலரும் பேரணியில் கலந்து கொண்டனர்.


    ×