என் மலர்
நீங்கள் தேடியது "stray dogs roaming around"
- கே.சி.பட்டியில் உள்ள பஸ் நிறுத்துமிடம் மற்றும் தெருக்களில் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உலா வருகிறது. சிறியவர்கள், முதியோர் மற்றும் பயணிகள் பயந்து செல்கின்றனர்.
- உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் தெருநாய்களை பிடித்து கருத்தடை மற்றும் தொற்றுநோயுடன் சுற்றி வரும் நாய்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலைப்பகுதிகளான தாண்டிக்குடி, பெரும்பாறை, மங்களம் கொம்பு, மஞ்சள்பரப்பு, குப்பம்மாள்பட்டி. கே.சி.பட்டி போன்ற பகுதியில் தெருநாய்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இவை தெருக்களில் வலம் வந்து சாலையில் நடந்து செல்பவர்களையும், சிறுவர்களையும் துரத்தி ச்சென்று கடித்து குதறுவ தாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் அந்த வழியாக வருபவர்க ளையும் நாய்கள் விட்டு வைப்பதில்லை. வாகனங்க ளை பின் தொடர்ந்து விரட்டுகிறது. இதனால் பதட்டமடையும் வாகன ஓட்டிகள் நாய்களிடம் இருந்து தப்பிப்பதற்காக வாகனங்களை வேகமாக ஓட்டிச்சென்று விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன.
கடந்த சில நாட்களாக கே.சி.பட்டியில் உள்ள பஸ் நிறுத்துமிடம் மற்றும் தெருக்களில் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் உலா வருகிறது. இதனால் அப்பகுதியில் சிறியவர்கள், முதியோர் மற்றும் பயணிகள் பயந்து செல்கின்றனர். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தெருநாய்களின் தொல்லையை கட்டுபடுத்த வேண்டும். உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் தெருநாய்களை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும். தொற்றுநோயுடன் சுற்றி வரும் நாய்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். நாய்க ளிடம் இருந்து பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






