search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Stealing cows"

    • பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை
    • போலீசார் விசாரணை

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் கோட்டை பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 65). இவர் கொண்டாபுரம் பகுதியில் விவசாயம் செய்து அதே இடத்தில் பசுமாடுகளை வளர்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பசுக்களுக்கு உணவு அளித்துவிட்டு கொட்டகையில் அடைத்து பூட்டிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

    மீண்டும் நேற்று காலை வயலுக்கு சென்று பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு 3 பசுக்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.மேலும் அந்தப் பகுதியில் உள்ள ஏரிக்கரை உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் பசுக்கள் கிடைக்கவில்லை.

    இதனையடுத்து அவர் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பசுக்களை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ×