search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "State fencing competition"

    • நேரு பார்க் மைதானத்தில் போட்டி நடக்கிறது.
    • பெண்களுக்கான போட்டி நாளையும் 17-(ந்தேதியும்), ஆண்களுக்கான பந்தயம் 18-ந்தேதியும் நடக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாடு வாள் வீச்சு சங்கத்தின் அடாக்கமிட்டி சார்பில் மாநில சீனியர் வாள்வீச்சு சாம்பியன் ஷிப் போட்டி சென்னையில் 2 நாட்கள் நடத்தப்படுகிறது. நேரு பார்க் மைதானத்தில் போட்டி நடக்கிறது. பெண்களுக்கான போட்டி நாளையும் 17-(ந்தேதியும்), ஆண்களுக்கான பந்தயம் 18-ந்தேதியும் நடக்கிறது.

    இதில் வெற்றிபெறுவ தற்கு மராட்டிய மாநிலம் புனேயில் வருகிற 24 முதல் 28-ந்தேதி வரை நடைபெறும் தேசிய சீனியர் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த தகவலை தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் அடாக் கமிட்டி சேர்மன் சுப்பையா தன சேகரன், ஒருங்கிணைப்பாளர் வி.கருணா மூர்த்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    • சிறுமிகளுக்கான போட்டி வெள்ளிக்கிழமையும், சிறுவர்களுக்கான போட்டி சனிக்கிழமையும் நடைபெறுகிறது.
    • மாநிலம் முழுவதும் இருந்து 250-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்கிறார்கள்.

    சென்னை:

    தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் அடாக் கமிட்டி சார்பில் மாநில வாள்வீச்சு (10 மற்றும் 12 வயதுக்குட்பட்டோர்) சாம்பியன்ஷிப் போட்டி காஞ்சீபுரத்தில் நடத்தப்படுகிறது. இந்த போட்டி வருகிற 29 மற்றும் 30-ந்தேதிகளில் அங்குள்ள மாவட்ட விளையாட்டு ஸ்டேடியத்தில் (அன்னை அஞ்சுகம் திருமண மண்டபம்) நடக்கிறது.

    சிறுமிகளுக்கான போட்டி வெள்ளிக்கிழமையும், சிறுவர்களுக்கான போட்டி சனிக்கிழமையும் நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் இருந்து 250-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்கிறார்கள்.

    இந்த தகவலை தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் அடாக் கமிட்டி சேர்மன் சுப்பையா தனசேகரன், ஒருங்கிணைப்பாளர் வி. கருணாமூர்த்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

    ×