search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sriramar"

    • அனுமனும், விரைவாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதாலேயே அவரின் அனுமதி பெறாமல் சிவலிங்கம் எடுக்க முனைந்ததை கூறி மன்னிப்பு கேட்டார்.
    • ஸ்ரீகால பைரவரும் மகிழ்ச்சி அடைந்து சிவலிங்கத்தை அனுமனுக்கு கொடுத்து அனுப்பினார்.

    காசியின் காலபைரவராகிய தன்னிடம் அனுமதி ஏதும் பெறாமல் அனுமன் லிங்கத்தை எடுக்க முயல்வது கண்டு கோபம் அடைந்த ஸ்ரீகால பைரவர், என் அனுமதி இல்லாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம் என்று அனுமனை தடுத்தார்.

    முதல் முறை சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு போகும் போதும் இந்த காலபைரவர் ஏதோ சூழ்ச்சி செய்து காளிங்க மடுவில் தடுத்துவிட்டார்.

    இப்போது மறுபடியும் தன்னுடைய முயற்சிக்கு தடை செய்கிறார் என்று கோபம் அடைந்த அனுமன் கால பாரவரை தாக்கத் தொடங்கினார்.

    ஆணவத்தால் செய்த போராகையால் அனுமனுக்கு தோல்வியே கிட்டுகிறது.

    அந்த சமயத்தில் அங்கு வந்த முனிவர்கள் காலபைரவரை வணங்கி, "உலக நன்மைக்காகவும், ராமனின் பெருமைக்காகவும் இந்த சிவலிங்கம் தென்னாடு போக அனுமதிக்க வேண்டும்" என்று வேண்டினார்கள்.

    அனுமனும், விரைவாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதாலேயே அவரின் அனுமதி பெறாமல் சிவலிங்கம் எடுக்க முனைந்ததை கூறி மன்னிப்பு கேட்டார்.

    ஸ்ரீகால பைரவரும் மகிழ்ச்சி அடைந்து சிவலிங்கத்தை அனுமனுக்கு கொடுத்து அனுப்பினார்.

    தன் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்கு துணை புரிந்ததால் கருடன் காசி நகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும், சுயம்புலிங்கத்தை அனுமனுக்கு உறுதி செய்த பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக்கூடாது என்றும் ஸ்ரீகால பைரவர் சாபமிட்டார்.

    அவரின் அந்த சாபப்படியே இன்றும் காசியின் நகர எல்லையில் கருடன் பறப்பதில்லை. அங்கே பல்லிகளும் ஒலிப்பதில்லை.

    • காரணம் காசியில், கங்கைக்கரையில் எங்கு பார்த்தாலும் லிங்கங்களாகவே காட்சி அளித்தன.
    • இந்த லிங்கங்களில் எது சுயம்புலிங்கம் என்பதை கண்டு பிடிக்க முடியாமல் அனுமன் திணறினார்.

    "நான் கொண்டு வந்த லிங்கம் இங்கே வேரூன்றி நின்றதற்கு இந்த காளிங்க மடுகு தான் காரணம்.

    இது வற்றியிருந்தால் நான் லிங்கத்தை மாய சிறுவனிடம் கொடுக்காமல், தட்டுத்தடுமாறி சற்று தாமதமாகவாவது ராமேஸ்வரம் போய் சேர்ந்திருப்பேனே என்று மடுகின்மேல் ஆஞ்சநேயருக்கு கடும் கோபம் வந்தது.

    அருகில் இருந்த காரிகிரி என்ற மலையைப் பெயர்த்தெடுத்தார்.

    அந்த மடுகு மீது போட்டு "இந்த மலைப்பிரதேசம் இனி வனப்பிரதேசமாகப் போகக்கடவது என்று சபித்தார்.

    அந்த காரிகிரி மலையே இப்போது நாம் ராமகிரியில் காணும் பெரிய மலை.

    ராமேசுவரத்தில் எல்லோரும் காசி லிங்கத்திற்காக காத்திருப்பார்கள் என்பதால் நேரத்தை வீணாக்காமல் ஆஞ்சநேயர் மறுபடியும் காசிக்கு சென்றார்.

    இந்த முறை காசியில் தெரிந்த காட்சிகள் அனுமனுக்கு ஆச்சரியம் அளித்தது.

    காரணம் காசியில், கங்கைக்கரையில் எங்கு பார்த்தாலும் லிங்கங்களாகவே காட்சி அளித்தன.

    இந்த லிங்கங்களில் எது சுயம்புலிங்கம் என்பதை கண்டு பிடிக்க முடியாமல் அனுமன் திணறினார்.

    அப்போது ஒரு குறிப்பிட்ட லிங்கத்திற்கு மேலே கருடன் வட்டமிட்டது.

    அதே நேரம் பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புகளினால் அதுவே சுயம்புலிங்கம் என்பதை உணர்ந்த அனுமன் அதனை எடுக்க முயன்றார்.

    • இந்த தலம் ஸ்ரீ கால பைரவரின் ஷேத்திரம் ஆயிற்றே அவர்தான் மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து தன்னை ஏமாற்றி விட்டார் என்று தெரிந்து கொண்டார்.
    • தான் கொண்டு வந்த சுயம்புலிங்கத்தை அவரோடு வைத்துக் கொள்ளவே இத்தனை நாடகங்கள் ஆடி இருக்கின்றார்.

    இதற்குள் மதியம் நெருங்கி விட்டது. ஆதவனும் தன் வெப்பத்தை தணித்துக் கொண்டார்.

    புயலாக அடித்த காற்று படிப்படியாக குறைந்து தென்றலாக மாறியது. திருக்காரிக்கரை கிராம மக்களும் தமது இல்லங்களை விட்டு வெளிவரத் தொடங்கினர்.

    இந்த மாறுதல்களையெல்லாம் கவனித்த மாருதி, இவையெல்லாம் சாதாரண மாயைகள் அல்ல. ஒரு தெய்வத்தின் லீலைகள் என்பதை புரிந்து கொண்டார்.

    அவர் யோசித்த போது, உண்மைகள் யாவும் அவர் ஞான அறிவிற்கும் புலனானது.

    இந்த தலம் ஸ்ரீ கால பைரவரின் ஷேத்திரம் ஆயிற்றே. அவர்தான் மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து தன்னை ஏமாற்றி விட்டார் என்று தெரிந்து கொண்டார்.

    தான் கொண்டு வந்த சுயம்புலிங்கத்தை அவரோடு வைத்துக் கொள்ளவே இத்தனை நாடகங்கள் ஆடி இருக்கின்றார்.

    ராமேஸ்வரத்தில் ஸ்ரீராமர் கையால் பிரதிஷ்டையாக வேண்டிய லிங்கம். அதே லக்கனத்தில் கால பைரவர் கையால் திருக்காரிக் கரையில் பிரதிஷ்டையாகி விட்டதே.

    அங்கு ஸ்ரீராமர் தன் வரவை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பாரே என்று பலவாறு நினைத்து ஆத்திரமும் துக்கமும் அடைந்தார்.

    • முயற்சியில் தோற்றுப்போன ஆஞ்சநேயர் தனக்கு ஏற்பட்ட கர்வ பங்கத்திற்கு வெட்கப்பட்டு லிங்கத்தைப் பக்தியுடன் வலம் வந்தார்.
    • மன்னிக்கக் கோரி பிரார்த்தித்து நமஸ்கரித்தார்.

    சிறுவன் குரல் கேட்டு திடுக்கிட்ட ஆஞ்சநேயர் விரைந்து கரையேறினார்.

    சிறுவன் நின்ற இடத்துக்கு ஓடி வந்தார். அங்கு "பூமியில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    "இப்படி செய்து விட்டானே இந்த சிறுவன்" என்று கோபப்பட்டார்.

    கோபம் கண்ணை மறைக்க, தான் ஏற்கனவே காசியில் இருந்து பெயர்த்தெடுத்து வந்த லிங்கம் தானே இது என்ற அலட்சிய உணர்வு ஏற்பட்டது.

    சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்த தனக்கு, இந்த சிவலிங்கம் எம்மாத்திரம் என்ற ஆணவத்தாலும், தன் பலமிக்க நீண்ட வாலினால் அந்த சுயம்பு சிவலிங்கத்தை சுற்றி இழுத்தார்.

    ஆனால் லிங்கம் அசையவில்லை. சற்றும் லிங்கம் அசையாதிருக்கவே சுற்றியிருந்த வாலை சற்று இறுக்கி, பலமாக இழுத்தார்.

    ஆனால் லிங்கமோ இருந்த இடத்தை விட்டுத் துளி கூட நகரவே இல்லை.

    முயற்சியை கைவிடாத ஆஞ்சநேயர் தன் முழு பலத்தையும் பிரயோகித்து இழுத்தபோது கூட போனால் போகிறது பாவம் என்று பரிதாபப்பட்டுப் பரிகசிப்பது போல லிங்கம் சிறிது வடக்குப் புறமாகச் சாய்ந்ததே தவிர பெயர்ந்து வரவில்லை.

    முயற்சியில் தோற்றுப்போன ஆஞ்சநேயர் தனக்கு ஏற்பட்ட கர்வ பங்கத்திற்கு வெட்கப்பட்டு லிங்கத்தைப் பக்தியுடன் வலம் வந்தார்.

    மன்னிக்கக் கோரி பிரார்த்தித்து நமஸ்கரித்தார்.

    • அதற்கு அச்சிறுவனும் ஐயா, தாகத்தால் அவதிப்படும் தங்களுக்கு நான் அவசியம் உதவுகிறேன். ஆனால் நானோ சிறுவன்.
    • இவ்வளவு பெரிய சிவலிங்கத்தை என்னால் சுமக்க முடியுமா? என்பதுதான் யோசனையாக இருக்கிறது என்று இழுத்தான்.

    இதுதான் தக்க சமயம் என உணர்ந்த ஸ்ரீகால பைரவர் தன் அஷ்டபுஜங்கள் (எட்டு கரங்கள்) சுன வாகனம் (நாய் வாகனம்) முதலியவற்றை கைவிட்டு ஒரு மாடு மேய்க்கும் சிறுவனாக தன்னை மாற்றிக் கொண்டு சில பசுக்களையும் சிருஷ்டித்துக் கொண்டு அவற்றை மேய்ப்பவன் போல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு முன்பாக நடமாடினார்.

    அச்சிறுவனைக் கண்ட ஆஞ்சநேயர், "தம்பி, தாகத்தால் தவித்துக் கொண்டிருக்கும் எனக்கு தண்ணீர் இருக்கும் இடத்தைக் காண்பிப்பாயாக" என்று கேட்டுக் கொண்டார்.

    சிறுவன் வடிவில் இருந்த சேத்திர பாலரும் தன்னுடன் மாருதியை, காளிங்க மடுகின் கரைக்கு அழைத்துச் சென்றார்.

    காளிங்க மடுகு, சுவையான தண்ணீருடன் கடல் போல் நிரம்பி இருப்பதைக் கண்ட ஆஞ்சநேயர் மிகுந்த ஆனந்தம் அடைந்தார்.

    அதிக தாகத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஆஞ்சநேயர் மனமகிழ்ந்து, "சிறுவனே, இந்த சுயம்பு லிங்கத்தைச் சற்று நேரம் வைத்திருப்பாயாக.

    இதைக் கீழே வைக்கக்கூடாது.

    நான் தாக சாந்தி செய்து கொண்டு வந்து வாங்கிக் கொள்கிறேன்" என்று கூறினார்.

    அதற்கு அச்சிறுவனும் ஐயா, தாகத்தால் அவதிப்படும் தங்களுக்கு நான் அவசியம் உதவுகிறேன். ஆனால் நானோ சிறுவன்.

    இவ்வளவு பெரிய சிவலிங்கத்தை என்னால் சுமக்க முடியுமா? என்பதுதான் யோசனையாக இருக்கிறது என்று இழுத்தான்.

    அதற்கு மாருதி, "பயப்படாதே, இது பாரமாக இல்லாதவாறு யான் உனக்கு வரம் அளிக்கிறேன்" என்று கூறினார்.

    அந்த தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் வடிவில் இருக்கும் பைரவர் மாருதியிடம் இருந்து அந்த சிவலிங்கத்தை வாங்கிக் கொண்டார்.

    "ஐயா தாங்கள் விரைவில் வந்து சிவலிங்கத்தை வாங்கிக் கொள்ள வேண்டும்.

    என்னால் அதிக நேரம் பாரம் தாங்க முடியாது. அப்படி தாங்க முடியாமல் போனால் சிவலிங்கத்தைக் கீழே வைத்துவிட நேரிடும்" என்று தன் எண்ணத்தை மறைமுகமாகத் தெரிவித்தார்.

    தான் வரமளித்தும் சிறுவன் பயப்படுகிறானே என்று நினைத்த மாருதி விரைவில் சிவலிங்கத்தை வாங்கிக் கொள்ளவே எண்ணினார்.

    ஏனெனில், முகூர்த்த லக்னம் வேறு நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தவராய் மடுகில் இறங்கி, தாகம் தீரும் வரை நீரை அருந்தினார். பின்னர் "அப்பாடா என்று ஒரு ஆசுவாசப் பெருமூச்சு விட்டார்.

    அவசரமாக சற்றே நீராடிக் களைப்பையும் போக்கிக் கொண்டார்.

    இதற்குள் அந்த சிறுவன் வடிவில் இருந்த கால பைரவர், தான் திட்டமிட்டபடியே, அந்த மடுகுக் கரையில் ஏற்கனவே நிர்ணயம் செய்திருந்த இடத்தில் அந்த சுயம்பு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து விட்டார்.

    "பாரம் தாங்க முடியாததால் லிங்கத்தை பூமி மீது வைத்து விட்டேன்" என்று உரக்கக் கூறி விட்டு மறைந்து விட்டார்.

    • அங்கிருக்கும் சுயம்பு லிங்கங்களில் ஒரு பெரிய சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டார்.
    • பிறகு ஆகாய மார்க்கத்தில் ராமேஸ்வரத்தை நோக்கிப் பயணமானார்.

    காசி பட்டணத்திற்கு சென்ற அனுமான் அன்றிரவு அங்கு உறங்கி மறுநாள் ஆதவன் உதிக்கும் முன்னரே எழுந்தார்.

    புனித கங்கையில் நீராடி, பக்தி சிரத்தையுடன் ஸ்ரீ காசி விஸ்வநாதரை தரிசித்தார்.

    அங்கிருக்கும் சுயம்பு லிங்கங்களில் ஒரு பெரிய சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டார்.

    பிறகு ஆகாய மார்க்கத்தில் ராமேஸ்வரத்தை நோக்கிப் பயணமானார்.

    கால பைரவருக்கு கொடுத்த வாக்குப்படி ஆதவன் உதயமாகி தன் பூரண சக்தியுடன் பிரகாசிக்கத் தொடங்கினார்.

    வாயு பகவானும் ஒப்புக் கொண்டபடி தென் திசையில் இருந்து வடதிசை நோக்கிப் பிரளயகாலப் புயல் போல் வீசத் தொடங்கினார்.

    ங்கா தேவியும் ஆஞ்சநேயர் கண்களுக்கு எங்கும் புலப்படாமல் மறைந்து போனார்.

    சுட்டுப் பொசுக்குகின்ற சூரிய வெப்பத்தின் கொடுமை, வேகத்தைக் குறைக்கும் பலமான எதிர்க்காற்று, தன் தோளின் மேல் இருக்கும் சிவலிங்கத்தின் பாரம் இவைகளினால் ஆஞ்சநேயர் விரைவில் களைத்துப் போனார்.

    தாங்க முடியாத தாகத்தோடு குடிதண்ணீரைத்தேடி அலைந்தார்.

    ஆகா, இன்று என்னவாயிற்று. நேற்று இதே வழியாக செல்லும் போது ஆறுகள், குளங்கள், கிணறுகள் எல்லாம் நீர் நிரம்பியிருந்தனவே.

    ஒருநாள் இரவுக்குள் எல்லாம் எப்படி வற்றிப்போயின?

    என்றுமில்லாத அளவில் இன்று ஏன் ஆதவன் இப்படி சுட்டுப் பொசுக்குகிறான்?

    எதிர் காற்றும் பலமாக இருக்கிறதே? முன்பு சஞ்சீவி மலையைப் பெயர்த்தெடுத்து வரும்பேது கூட இத்தனை களைப்பு எனக்கு ஏற்படவில்லையே என்றெல்லாம் பலவாறாக சிந்தித்தப்படியே திருக்காரிக்கரை கிராமத்தை வந்தடைந்தார் மாருதி.

    • திட்டத்தின் முதல் கட்டமாக சூரிய பகவானை அணுகினார் கால பைரவர்.
    • “நாளை காலை முதல் மதியம் வரை நீ உனது பரிபூரண சக்தியைப் பிரயோகித்துப் பிரகாசிக்க வேண்டும்” என்று ஆணையிட்டார்.

    திட்டத்தின் முதல் கட்டமாக சூரிய பகவானை அணுகினார் கால பைரவர்.

    "நாளை காலை முதல் மதியம் வரை நீ உனது பரிபூரண சக்தியைப் பிரயோகித்துப் பிரகாசிக்க வேண்டும்" என்று ஆணையிட்டார்.

    அடுத்து கங்கா தேவியிடம் கால பைரவர் சென்றார்.

    "பவானி நாளை சூர்யோதயம் முதல் மதியம் வரை காசியில் இருந்து திருக்காரிக்கரை வரை உள்ள பிரதேசத்தில் நீ ஆஞ்சநேயன் கண்களுக்கு மதியத்திற்கு பிறகே புலப்பட வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

    பிறகு பைரவர் வாயு பகவானிடம் சென்றார்.

    "வாயு தேவா, நாளை காலை முதல் மதியம் வரை திருக்காரிக்கரையில் இருந்து காசி வரை வடதிசை நோக்கி, உனது முழு பலத்தையும் பிரயோகித்துப் பெரும் புயலாக வீசவேண்டும் என்று பைரவர் கேட்டுக் கொண்டார்.

    அது தன் மைந்தனுக்கு எதிரான சூழ்ச்சி என்பதை அறியாத வாயு பகவானும் அப்படியே செய்கிறேன் என்று ஒப்புக் கொண்டார்.

    இப்படியாக தன்னுடைய திட்டத்திற்கு பலமான அஸ்திவாரத்தை போட்டுக் கொண்ட பைரவர் அன்று இரவே, தன் இருப்பிடமாகிய திருக்காரிக்கரை கிராமவாசிகளின் கனவில் தோன்றி, "நாளை விடியற்காலை முதல் மதியம் வரை யாரும் தங்கள் இல்லங்களை விட்டு வெளியே வர வேண்டாம்" என்று கட்டளையிட்டார்.

    • ராமர் கட்டளையை சிரமேற்கொண்டு, அக்கணமே காசியை நோக்கி ஆகாய மார்க்கத்தில் திருக்காரிக்கரை வழியாக பறந்தார் மாருதி.
    • திருக்காரிக்கரை அதாவது இன்றைய ராமகிரி கிராமத்தை கால பைரவ சேத்திரம் என்றும் அழைப்பது உண்டு.

    ராமர் கட்டளையை சிரமேற்கொண்டு, அக்கணமே காசியை நோக்கி ஆகாய மார்க்கத்தில் திருக்காரிக்கரை வழியாக பறந்தார் கடமை தவறாத கர்ம வீரரான மாருதி.

    திருக்காரிக்கரை அதாவது இன்றைய ராமகிரி கிராமத்தை கால பைரவ சேத்திரம் என்றும் அழைப்பது உண்டு.

    ஏனெனில் ஸ்ரீ கால பைரவ மூர்த்தி பிரதான கடவுளாக எழுந்தருளி பாலித்துக் கொண்டிருக்கிறார்.

    இப்போது சிவலிங்க வடிவம் போல் தோற்றம் தரும் பெரியமலை அந்நாளில் அங்கு இல்லை.

    அந்த இடத்தில் காளிங்கு மடுகு என்ற பெரிய ஒரு நீர்த்தேக்கம் இருந்தது.

    அதன் தென்கரையோரம் தன் பததினி ஸ்ரீ காளிகாதேவியுடன் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீகால பைரவர் ஆகாய மார்க்கத்தில் போகும் ஆஞ்சனேயரைக் கண்டு தன் ஞான திருஷ்டியால் மாருதி செல்லும் நோக்கத்தை உணர்ந்து கொண்டார்.

    காசியில் இருந்து ஆஞ்சநேயர் கொண்டு வர இருக்கும் சுயம்பு லிங்கத்தை தன்னுடைய சேத்திரமாகிய திருக்காரிக்கரையில் தன் அருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

    அதற்கு ஒரு நல்ல திட்டம் செய்தார்.

    • இதனால் கோபம் கொண்ட ஸ்ரீராமர் அவனை யுத்தத்திலே வதம் செய்து தனது தேவியை மீட்டுக் கொண்டு வந்தார்.
    • பிறகு வானர பரிவாரங்களோடு ராமேஸ்வரம் வந்து சேர்ந்தார்.

    திரேதாயுகத்திலே ஸ்ரீமன் நாராயணன் ராமாவதாரம் எடுத்து வந்தபோது, சீதா தேவியை இலங்கை வேந்தன் ராவணாசுரன் கவர்ந்து சென்று, சிறை வைத்தான்.

    இதனால் கோபம் கொண்ட ஸ்ரீராமர் அவனை யுத்தத்திலே வதம் செய்து தனது தேவியை மீட்டுக் கொண்டு வந்தார்.

    பிறகு வானர பரிவாரங்களோடு ராமேஸ்வரம் வந்து சேர்ந்தார்.

    பிரம்ம அம்சத்தில் பிறந்தவனும், வேதங்களை நன்கு பயின்றவனும், சிறந்த சிவபக்தனுமாகிய ராவணனை வதம் செய்த காரணத்தால் ராமருக்கு பிரம்மகத்தி தோஷம் ஏற்பட்டு இருந்தது.

    அந்த தோஷத்துடன் அயோத்தி சென்று, முடிசூடிக் கொண்டு, அரசாள்வது முறையாகாது என்றும் குல குருவான வசிஷ்டர் முதலான முனிவர்கள் கூறினர்.

    எனவே ராமேஸ்வரத்தில் அதற்கு ராமர் பரிகாரம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக காசியில் இருந்து ஒரு சுயம்பு (இயற்கையாக தோன்றியது) லிங்கத்தைக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து பூஜித்து, பிரம்ம கத்தி தோஷத்தில் இருந்து விடுபட ஸ்ரீராமர் முடிவு செய்தார்.

    ஆஞ்சனேய சுவாமியை அருகில் அழைத்து, "வாயுபுத்திரா, இன்றே நீ காசித்தலம் செல்வாயாக என்று பணித்தார்.

    • திருமணங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பது வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதால் தான்.
    • எலுமிச்சம் பழம் ராஜாக்களுக்கு கொடுக்கக் கூடிய மரியாதை நிமித்தமான பழம்.

    ராமதூதன் அனுமானுக்கு துளசி மாலை சார்த்துவதால் ஸ்ரீராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி, செல்வம் ஆகியவை பெறலாம்.

    அசோக வனத்தில் சீதையைக் கண்டு ராமபிரானின் நிலையை விளக்கமாக எடுத்துரைத்ததைப் பார்த்த சீதா சந்தோஷமடைந்து அனுமனை ஆசீர்வதிக்க எண்ணி அருகில் வளர்ந்திருந்த கொடிகளின் இலைகளைக் கிள்ளி தலையில் தூவி ஆசீர்வதித்தாள்.

    'இந்த இலை உனக்கு வெற்றியைத் தரட்டும்' என்றாளாம். வெற்றியைக் காரணமாக்கி ஆசீர்வதித்தமையால் இதற்கு 'வெற்றிலை' என்று பெயர் வந்தது.

    ஆகையால், பக்தர்கள் தன் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் அது வெற்றியடைய வேண்டும் என்ற காரணத்தினால் வெற்றிலை மாலையை சார்த்தி தன் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

    திருமணங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பது வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதால் தான்.

    எலுமிச்சம் பழம் ராஜாக்களுக்கு கொடுக்கக் கூடிய மரியாதை நிமித்தமான பழம்.

    மற்றொன்று சம்ஹார தொழில் செய்யும் கடவுள் களுக்கு மிகவும் பிடித்தமான பழம்.

    நரசிம்மன், வராகம், கருடன் ஆகிய சக்திகள் அனுமானிடத்தில் ஒருங்கே அமைந்துள்ளதாலும், ஈஸ்வரனின் அம்சம் ஆனதாலும் இவருக்கு எலுமிச் சம்பழ மாலை சார்த்தி வழிபடு வோர் வாழ்வில் எதிரிகளின் தொல்லை நீங்கப் பெறுவர்.

    • சுசீந்திரம் ஆஞ்சநேயர் 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார்.
    • அபயவரத ஆஞ்சநேயர் மார்பில் சிவலிங்கம் வடிக்கப்பட்டுள்ளது.

    குபேர ஆஞ்சநேயர்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலில் தான் குபேர ஆஞ்சநேயர் உள்ளார். ஆஞ்சநேயர், ராமனை பார்த்தபோது அவர் தென்திசையை பார்த்தபடி அமர்ந்திருந்தார். வடக்கு பக்கமாக திரும்பி அவரை பார்த்ததால் இத்தலத்து ஆஞ்சநேயர் வடதிசை பார்த்தபடியே இருக்கிறார். இது குபேர திசையாகும். இத்திசையை பார்த்த ஆஞ்சநேயரை காண்பது அபூர்வம்.

    இத்தலத்து ஆஞ்சநேயர் பிரகாரமூர்த்தியாக இல்லாமல் மூலவராக அருளுகிறார்.இவர், தனது வாலை சுருட்டி தலைக்கு மேலே கிரீடம் போல வைத்து, வராக (பன்றி) முகத்துடன் காட்சி தருவது சிறப்பு. கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலையர் திருக்கோயிலில் 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் அருள்வலிக்கிறார். இவரது வாலின் நுனிப்பகுதி தலைக்கு மேல் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இவரை வணங்கினால் குபேர சம்பத்து பெருகும் என்பது நம்பிக்கை.

    பெருமாள் கருவறைக்குள் ஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் திருக்கோயிலில் உள்ள மூலவர் சுமார் இரண்டரை அடி உயரத்தில் பாலவடிவில் நின்ற கோலத்திலும், அவருக்கு வலப்புறத்தில் ஆஞ்சநேயர் வணங்கிய கோலத்திலும் உள்ளனர்.

    ராமபக்தரான ஆஞ்சநேயர், பெருமாள் கோயில்களில் தனி சன்னதியில் இருப்பதைப் பார்த்திருக்கலாம். ஆனால், இக்கோயிலில் கருவறையில் பெருமாள் அருகிலேயே இருப்பது சிறப்பம்சம்.

    அபயவரத ஆஞ்சநேயர்: திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயரின் மார்பில் சிவலிங்கம் வடிக்கப் பட்டுள்ளது. கால்களில் பாதரட்சை (காலணி) அணிந்து, இடுப்பில் கத்தி செருகி போர்க்கோலத்தில் காட்சி தருகிறார். இத்தகைய அமைப்பில் ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம்.

    ஜெயமங்கள ஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை ஜெயமங்கள ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலை எட்டு அடி உயர சுயம்பு பாறையில் ஆறு அடி உயரமும், ஐந்து அடி அகலமும் உடையவராக கம்பீரமாக நேர் கொண்ட பார்வையுடன் காட்சி அளிக்கிறார். இங்குள்ள பாறையின் பின்புறத்தில் அலங்கார நந்தி சிலை செதுக்கப்பட்டுள்ளது.

    இந்த நந்தி சிலை ராமலிங்கேஸ்வரர் பின்நோக்கி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான அமைப்பு வேறு எங்குமில்லை என்று சான்றோர்கள் கூறினர்.

    வீரஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் சண்முகபுரம் வீரஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் பாலாற்றின் நடுவே படுத்த நிலையில் உள்ள பாறையில் வீர ஆஞ்சநேயராக சுமார் ஐந்து அடி நீளத்தில் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    பிரகாரத்தெய்வமாக இல்லாமல் இத்தலத்தின் மூலவராக இருந்து அருள்பாலிக்கும் வீரஆஞ்சநேயரின் முகம் இலங்கையை நோக்கி திரும்பியுள்ளது. கோவிந்தமலை, விஸ்வாமித்திரர் தவம் செய்த தாடகநாச்சி மலை ஆகிய இரு புனிதம் வாய்ந்த மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் தன் வீரத்திற்கு அறிகுறியாக வலது கையில் சஞ்சீவி மலையை தூக்கியபடியும், இடது கையை தொடையில் வைத்தபடியும் ஆறரை அடி உயரத்தில் நின்ற திருகோலத்தில் அருள்பாலிக்கிறார். ஆனால் இவரது காலின் கீழ்பகுதி ஆற்றுநீர் படும் வகையில் பூமிக்குள் அமைந்திருப்பது சிறப்பு.

    அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர்: கோயம்புத்தூர் மாவட்டம் அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயரது திருமேனி சாளக்கிராமத்தினால் ஆனது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

    பஞ்சமுக ஆஞ்சநேயர்: விழுப்புரம் மாவட்டம் பஞ்சவடீ ஜயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் 36 அடி உயரம் கொண்ட பிரமாண்ட திருமேனியாக அருள் பாலிக்கிறார்.

    பக்த ஆஞ்சநேயர்: நாமக்கல் மாவட்டம் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள பக்த ஆஞ்சநேயர் 18 அடி உயரமும், கையில் ஜெபமாலையும், இடுப்பில் கத்தியும் வைத்திருக்கிறார்.

    யோக நிலையில் ஆஞ்சநேயர்: மதுரை கோ.புதூர் சூர்யாநகர் முத்தப்பா சுவாமி திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் 30 அடி உயரத்தில் அமர்ந்த கோலத்தில் யோக நிலையில் அருள்பாலிக்கிறார்.

    பிரமாண்டமாய் ஆஞ்சநேயர் தரிசனம்: தூத்துக்குடி மாவட்டம் தெய்வச்செயல் புரம் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் 75 அடி உயரத்தில் பிரமாண்டமாக நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.

    அநுமேசுவரர்: சீதாப்பிராட்டியாரை எங்கு தேடியும் காணாமையால் மனம் நொந்து ஓரிடத்தில் ஈசனை ஸ்தாபித்து வேண்டினார் அனுமன். அதனால் அநுமேசுவரர் என்றும் அவ்வூர் அநுமன் பள்ளியாகவும், பூஜை பொருட்டு இறைவன் அனுமன் ஏற்படுத்திய நீர்க்குணி அநுமநதி என்றும் வழங்கலாயிற்று.

    சத்திய ஆஞ்சநேயர்: செங்கல்பட்டில் கோட்டைச் சுவரில் எழுந்தருளியிருக்கிறார் இவர். மக்கள் தங்களுக்குள் ஏற்படும் தகராறுகளைத் தீர்த்துக் கொள்ள இவருடைய சன்னதியில் சத்தியம் செய்வதுண்டு. இங்கே பொய் சத்தியம் செய்வோர் அழிவர் என்ற நம்பிக்கையும் நிலவுகின்றது.

    வால் அறுபட்ட ஆஞ்சநேயர்: ராமேஸ்வரத்தில் எழுந்தருளியிருக்கின்றார் இவர். காசியிலிருந்த விசுவநாதலிங்கம் கொண்டு வரச் சென்ற ஆஞ்சநேயர் வருவதற்கு தாமதமாகவே, ஸ்ரீராமன் சீதையை மணலால் லிங்கம் அமைக்கச் செய்து பூஜையை முடித்து விடுகிறார்.

    பின்வந்த அனுமன் ஆத்திரத்தில் மணல் லிங்கத்தை அப்பால் தள்ள முயல, அது முடியாமல் போகவே, வாலினால் சுற்றி பலம்கொண்ட மட்டும் இழுத்தார். அப்போது, அவரது வால் அறுந்து போனது. தனது தவறுணர்ந்து ராமனிடம் மன்னிப்புக் கேட்டு மீண்டும் வால் வளரப் பெற்றார். இங்கு, வால் அறுபட்ட நிலையில் உள்ள ஆஞ்சநேயரின் சிலையைக் காணலாம்.

    பாலரூப ஆஞ்சநேயர்: உடுப்பிக்கு கிழக்கே மூன்று கல் தொலைவில் ஒரு சிறுகுன்றில் துர்க்கை கோயில் ஒன்றுள்ளது. அதன் கீழ் குளக்கரையில் கோவணாண்டியாக பாலரூப ஆஞ்சநேயர் எழுந்தருளியுள்ளார். உடலெல்லாம் உரோமம் தெரியும்படி அருமையாக அச்சிலை வடிக்கப்பட்டுள்ளது.

    யோக ஆஞ்சநேயர்: வேலூர் சோளிங்கரில் உள்ள ஒரு சிறிய குன்றில் யோக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். நரசிம்மரை நேராக இருந்து தரிசிப்பவராய், நரசிம்மரைப் போலவே யோக நிலையில் இவர் இருக்கின்றார்.

    யந்த்ரோத்தாரக அனுமன்: ஹம்பியில் எழுந்தருளியிருப்பவர் இவர். ஆஞ்சநேயரை யந்திரத்தில் வடிவாக அமைத்துள்ளனர். பத்ம தளத்தோடு கூடிய ஒரு வட்டத்தின் நடுவே ஆறுகோணம் கொண்ட யந்திரம் வரையப்பட்டுள்ளது.

    அதன் மத்தியில் ஆஞ்சநேயர் அமர்ந்த நிலையில் காணப்படுகின்றார். கோணங்களிலே பீஜாக்ஷரங்கள் உள்ளன. வட்டத்தின் உட்புறம் தியான ஸ்லோகம் கிரந்த எழுத்தில் உள்ளது.

    ஜன்மபூமி ஆஞ்சநேயர்: பன்னூரில் உள்ள ஆஞ்சநேயர், ஆலயத்தில் கையைக் கூப்பிக் கொண்டு பவ்யமாக நிற்கும் பக்த ஆஞ்சநேயர் ஜன்மபூமி ஆஞ்சநேயர் என்ற திருநாமம் தாங்கியிருக்கிறார்.

    பிரபத்யாஞ்சநேயர்: மங்கள கிரி (ஆந்திரா) கல்யாண சரஸ் திருக்குளத்தின் கரையில் இந்த ஆஞ்சநேயர் கோயில் கொண்டுள்ளார். இவரே மங்களகிரியின் காவல் தெய்வம். ராமாவதாரம் முடிந்து ஸ்ரீமத் நாராயணன் வைகுண்டம் செல்லும்போது ஆஞ்சநேயரை மங்களகிரியிலேயே தங்கி நரசிம்மரை வழிபட்டுக் கொண்டிருக்கும்படி பணித்துவிட்டுச் சென்றதாக இத்தல புராணம் கூறுகிறது.

    திரிநேத்ர சதுர்புஜ அனுமார்: நாகப்பட்டினம் மாவட்டம் ஆனந்த மங்கலத்தில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயிலிலே தான் இந்தத் திரிநேத்ரதசபுஜ அனுமார் வீற்றிருக்கிறார். மூன்று கண்களுடனும் பத்துக் கைகளுடனும் காட்சி தருகின்றார்.

    ×