என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SPECIAL INFOUENZA PREVENTION CAMP"

    • காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது
    • 215 மாணவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.


    அரியலூர்:

    தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏராளமான மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்தும் வகையில் மாநிலம் தழுவிய அளவில் இன்று ஆயிரம் இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

    அதன்படி திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திடீர்குப்பம் சிறப்பு மாதிரி பள்ளி மற்றும் கீழப்பலூர் சுகாதார நிலையம் மலத்தான் குளம் மானிய துவக்கப்பள்ளி. அங்கன்வாடி வளாகம். போன்ற இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது.

    இதில் நிலவேம்பு குடிநீர் வழங்குதல், ரத்த மாதிரி பரிசோதித்தல், புகை மருந்து அடித்தல், குடிநீர் தொற்று நீக்க ஆய்வு செய்தல், குடிநீர் குழாய் பழுது நீக்குதல், நலக் கல்வி வழங்குதல். மேலும் 215 மாணவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.

    12 மாணவர்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டது, மேலும் பள்ளி வளாகங்கள் விடுதி வளாகங்கள் அங்கன்வாடி மையங்கள் போன்ற இடங்களில் கொசு மருந்து புகை அடித்தல் பணி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருமானூர் மருத்துவ அலுவலர் அருண் பிரசாத் தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல் சுகாதார ஆய்வாளர் ராமமூர்த்தி மற்றும் கருப்பண்ணன். செவிலியர்கள் சுமையா. மற்றும் தேவிஆகியோர் கலந்து கொண்டனர்.

    பள்ளி வளாகங்களில் கொசு மருந்து அடிக்கும் போது எடுத்த படம்.

    ×