என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special by unveiling the flag hoisting inscription"

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில் 2வது வட்ட மாநாடு மற்றும் கல்வெட்டு திறப்பு விழா, கொடியேற்று விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வட்டத் தலைவர் எஸ்.பிரகாஷ் தலைமை தாங்கினார். வட்டத் துணைத் தலைவர்கள் எம்.பழனிவேல், வி.கோகுல், வட்ட இணை செயலாளர்கள் டி.உமாபதி, எஸ்.மணிவண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.பாஸ்கர், ஜெ.வசந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் எஸ்.வினோத்குமார் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் கே.பெருமாள், மாநில துணைத்தலைவர் ஆர். ரவி, மாவட்டத் தலைவர் எம்.ஜெய்சங்கர், மாவட்ட இணை செயலாளர் ஜி. துரைராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கொடியேற்றி, கல்வெட்டை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்கள்.

    இந்த மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், கிராம உதவியாளர் காலி பணியிடங்கள் தேர்வாணையம் மூலம் நிரப்பக் கோரி கோருதல், ஓட்டுநர் பதவி உயர்வு வழங்க கோருதல், கிராம உதவியாளர்களை கிராம பணியை தவிர இதர பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன முடிவில் வட்ட பொருளாளர் எம்.வீரமணிகண்டன் நன்றி கூறினார்.

    கிராம வருவாய் ஊழியர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×