search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SP Singh"

    • மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என மத்திய மந்திரி கூறினார்.
    • இந்தியாவில் ஜே.என்.1 வகை தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது என தெரிவித்தார்.

    மதுரை:

    மதுரை எய்ம்ஸ் நிர்வாகத்துடன் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி எஸ்.பி.சிங் இன்று மதுரைக்கு வருகை தந்தார்.

    இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி.சிங், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும். எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளுக்கு ஜனவரி 2-ல் டெண்டர் விடப்படும். டெண்டர் விடப்பட்ட 3 ஆண்டுகளில் கட்டுமானம் முடிவடையும். மருத்துவமனை கட்டுமான மதிப்பு தற்போது 20 சதவீதம் உயர்ந்துள்ளது என தெரிவித்தார்.

    மேலும், ஜே.என்.1 வகை கொரோனா குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தியாவில் ஜே.என்.1 வகை தொற்று கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்தப் புதிய வகை கொரோனாவின் தாக்கம் குறைவுதான் என கூறினார்.

    ×